கோவை, ஆக.13- மலுமிச்சம்பட்டி ஊராட்சி திமுக பெண் கவுன்சிலர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், மலுமிச்சம் பட்டி, அவ்வையார் நகர், 2 ஆவது வீதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி சித்ரா. திமுகவைச் சேர்ந்த இவர் மலுமிச்சம்பட்டி ஊராட்சி கவுன்சிலராக உள்ளார். இவருக்கு மோகன் என்ற மகன் உள் ளார். இந்நிலையில், வீட்டில் சித்ரா, அவருடைய கணவர் ரவிக்குமார், மகன் மோகன் ஆகியோர் இருந்த னர். சாப்பிட்டு விட்டு தூங்குவதற் காக தயாராகிக் கொண்டு இருந்த னர். அப்போது முகமூடி அணிந்தபடி வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்தனர். அவர்களை பார்த்ததும் சித்ராவும், அவரது கண வரும் சத்தம் போட்டு யார் நீங்கள்?, எதற்காக வீட்டுக்குள் வருகிறீர்கள்? என கேட்டு உள்ளனர். ஆனால் அதற் குள் ஆவேசமாக வந்த கும்பல் அரி வாளால் கவுன்சிலர் சித்ரா, அவரது கணவர் ரவிக்குமார் ஆகியோரை சர மாரியாக வெட்டியது. அதை தடுப்ப தற்காக மகன் மோகன் ஓடி வந்தார். உடனே அவரையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் 3 பேருக்கும் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்த 3 பேரும் கூச்சலிட்டனர். அதை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதைக் கண்ட முகமூடி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
இதையடுத்து உயி ருக்கு போராடிய கவுன்சிலர் சித்ரா, ரவிக்குமார், மோகன் ஆகிய 3 பேரை யும் மீட்டு கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வகிறகிறது. இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணையை முதற்கட்ட விசாரணையில், கவுன் சிலர் சித்ரா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 3.5 சென்ட் நிலம் வாங்கி உள் ளார். அதை மலுமிச்சம்பட்டி அம்பேத் கர் நகரில் பெட்டிக்கடை நடத்தி வரும் ராஜா (23) என்பவர் புரோக்கராக செயல்பட்டு வாங்கிக் கொடுத்து உள் ளார். இதற்காக ராஜாவுக்கு 2 சத விகித கமிசன் பேசப்பட்டு இருந்த தாக தெரிகிறது. ஆனால், அந்த கமி சன் தொகையை சித்ரா கொடுக்க வில்லை என கூறப்படுகிறது. இத னால் அடிக்கடி சித்ரா குடும்பத்தி னரை சந்தித்து ராஜா தகராறு செய்து உள்ளார். இந்நிலையில், ராஜா தனக்கு தெரிந்த 4 பேருடன் முகமூடி அணிந்து சென்று சித்ரா உட்பட 3 பேரையும் அரிவாளால் வெட்டியது தெரியவந் தது. அதன்பிறகு ராஜா உள்ளிட்ட 5 பேரும் தப்பிச்சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து ராஜாவை போலீ சார் பிடித்து விசாரணை மேற்கொண் டனர். அதில், முத்துப்பாண்டி (24), முகேஷ்கண்ணன் (22), பிச்சை பாண்டி (23), ஶ்ரீரக்சித் (18) ஆகியோ ருடன் சென்று அரிவாளால் வெட்டி யது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.