உடுமலை, பிப்.19- உடுமலை மலைவாழ் மக்கள் குடி யிருப்பு பகுதிகளில் மக்களின் அடிப் படை தேவைகள் குறித்து பேரூராட்சி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர். உடுமலை தாலூகா தளி பேரூ ராட்சி 16 மற்றும் 17 ஆவது வார்டுகள் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதி களாக உள்ளது. இதில், 17 ஆவது வார்டு திருமூர்த்திமலை அடிவார பகு தியாக இருப்பதால் மின் விளக்கு, குடிநீர் மற்றும் சாலை வசதிகள் ஏற்ப டுத்தப்பட்டுள்ளது. ஆனால், 16 ஆவது வார்டு குருமலை மலைப்பகு தியில் இருப்பதால் எந்த வசதிகளும் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந் தனர். வன உரிமை சட்டப்படி தங்க ளுக்கும் பேரூராட்சி நிர்வாகம் சாலை மற்றும் மின் விளக்குகள் செய்து தர வேண்டும் என்று மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கடந்த ஆண்டு உடுமலை வனத்துறை அலுவலகத் தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதையடுத்து, திருமூர்த்தி மலையில் இருந்து குருமலை மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு சாலை அமைத்து தருவதாக அரசு உறுதியளித்தது. அதன் தொடர்ச்சியாக தளி பேரூ ராட்சி நிர்வாகத்தின் சார்பில் மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு சாலை அமைக்க ரூ. 49 லட்சம் மதிப் பீட்டில் டென்டர் விடப்பட்டது. இந்நிலையில், குருமலை மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் பொதுக் கழிப்பிடம், பள்ளி வளா கத்தில் கழிப்பிடம், மக்கள் பயன்ப டுத்தும் பொதுவான அனைத்து இடங் களிலும் சூரிய மின் விளக்குகள், மக் கள் குடியிருப்பு பகுதிகளை இணைக் கும் சாலைகள், பொது நிகழ்ச்சிக ளுக்கு நடத்தும் வகையில் சமுதாய நலக்கூடம் ஆகிய பணிகள் மேற் கொள்ள ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு அமைக்கடட் படவுள்ள சாலை இடத்தை அதி காரிகள் ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வில், பேரூராட்சி துணை இயக் குநர், பேரூராட்சி இணை இயக்குநர், ஈரோடு மண்டல பேரூராட்சி பொறி யாளர், தளி பேரூராட்சி செயலா ளர், மடத்துக்குளம் திட்ட வளர்ச்சி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரி கள் கலந்து கொண்டனர். இது குறித்து மலைவாழ் மக்கள் சங்கத் தலைவரும், தளி பேரூராட்சி யின் துணைத் தலைவர் செல்வம் கூறு கையில், சங்கத்தின் பல ஆண்டு போராட்டத்தால் சாலை அமையவி ருக்கும் இடம் மற்றும் மக்களின் தேவைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உள்ளார்கள். மேலும், சூரிய மின் விளக்கு, குடியிருப்பு இணைப்பு சாலைகள் அமைக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்று அதி காரிகள் தெரிவித்தார்கள். மண் வீடுக ளுக்கு பதில் புதிய காங்கீரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து உள்ளார்கள் என் றார்.