districts

ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர் கைது

தருமபுரி, அக்.15- மின் இணைப்புக்கு தடையில்லா  சான்று வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியரை போலீசார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், பொ.மல்லா புரம், விஜய் நகரம் காட்டுவளவைச் சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் இளவரசன் (30), அப்பகுதி யில் கடையுடன் கூடிய புதிய வீடு கட் டினார். இதையடுத்து அவர் தனது வீடு மற்றும் கடைக்கு மின் இணைப்பு பெறுவதற்காக பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் கடந்த ஒரு மாதத் திற்கு முன்பு தடையில்லா சான்று வழங்ககோரி விண்ணப்பித்தார். ஆனால், பேரூராட்சி நிர்வாகம் கால தாமதம் செய்ததாக தெரிகிறது. இத னால் இளவரசன் பேரூராட்சி செயல்  அலுவலர் நாகராஜன் உள்ளிட்ட அலு வலர்களுக்கு உதவியாளராக பணி புரியும் பில்பருத்தியைச் சேர்ந்த வெங் கடாசலம் (57) என்பவரை அணுகி னார். அப்போது இளவரசனிடம் தடையில்லா சான்று வழங்க தனக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என வெங்கடாசலம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும் பாத இளவரசன், இதுகுறித்து தரும புரி லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத் தில் புகாரளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளர் பெருமாள் தலைமையில் போலீசார்  ரசாயனம் தடவிய 25 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்த னர். இதையடுத்து இளவரசன் பொம் மிடியில் உள்ள தருமபுரி மெயின் ரோடு, மாரியம்மன் கோவில் அருகே வெங்கடாசலத்துக்கு பணம் கொடுத் தார். அப்போது அப்பகுதியில் மறைந் திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீ சார் வெங்கடாசலத்தை கையும் கள வுமாக பிடித்து கைது செய்தனர். இதன்பின் அவரை பேரூராட்சி அலு வலகத்துக்கு கொண்டு சென்ற போலீ சார் ரூ.25 ஆயிரம் லஞ்சம் யார்  வாங்க சொன்னது? எனக் கேட்டு அவ ரிடம் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து அலுவலகத்திலும் லஞ்ச  ஒழிப்பு போலீசார் சோதனை மேற் கொண்டனர். மின் இணைப்புக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க  ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூ ராட்சி ஊழியர் கைது செய்யப்பட்ட சம் பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.