கோவை, நவ.8- கணியூர் ஊராட்சியில் நாடாளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியில் கட்டப்பட்ட பல் நோக்கு மையத்தை, பி.ஆர்.நடரா ஜன் எம்பி., மக்கள் பயன்பாட்டுக் காக புதனன்று திறந்து வைத்தார். கோவை மாவட்டம் கணியூர் ஊராட்சிக்கு உட்பட்ட குமார் நகரில் பல்நோக்கு மையம் அமைக்கப் பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை யாக இருந்தது. இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனையேற்று, பல் நோக்கு மையக் கட்டிடம் கட்ட நாடா ளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ16.50 லட்சம் நிதியை பி.ஆர்.நடராஜன் எம்பி., ஒதுக்கீடு செய்தார். இந்த பல்நோக்கு மையத்தின் கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற நிலையில், மக்களின் பயன்பாட்டிற் காக கட்டடத்தை புதனன்று கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் திறந்து வைத் தார். முன்னதாக, விழாவின் நினை வாக மரக்கன்று ஒன்றை பல் நோக்கு மையக் கட்டிடம் அருகே நட்டு வைத்து சிறப்புரையாற்றி னார். இதனைத்தொடர்ந்து, கணி யூர் ஊராட்சி பொதுமக்கள் விடுத லைப் போராட்ட வீரர் என்.சங்கரய் யாவின் படம் பி.ஆர்.நடராஜனுக்கு நினைவு பரிசாக வழங்கினர். பின்னர், அங்கிருந்த பொது மக்களிடம் கோரிக்கைகளை கேட்ட றிந்த அவர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த நிகழ்வில் திமுக சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பரசு, முன்னாள் செயலாளர் ராமசாமி, சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகாமி, முத்து ராஜ், சிபிஎம் ஒன்றிய செயலாளர் சந்திரன், கணியூர் ஊராட்சி தலை வர் வேலுச்சாமி, துணைத் தலை வர் ராஜு மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.