districts

img

பரமத்திவேலூர் அருகே சிறுத்தை புலி நடமாட்டம் நடவடிக்கை தீவிரம்: வனத்துறை அமைச்சர் தகவல்

பொதுமக்கள் திடீர் சாலை மறியல் - பரபரப்பு

இருக்கூர் ஊராட்சிக்குட்பட்ட செஞ் சுடையாம்பாளையத்தைச் சேர்ந்த விவ சாயி செந்தில்குமாரின் கன்று குட்டியை சிறுத்தை புலி கடித்துக் கொன்று கரும்பு தோட்டத்தில் வீசிவிட்டு சென்றது. அப் போது விசாரணை செய்த வனத்துறை அலுவலர்கள், கால் தடத்தை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர். தற்போது அம்சவல்லி என்பவரது வீட்டில் கட்டியி ருந்த நாயை சிறுத்தை புலி தாக்கியுள் ளது. இச்சம்பவம் குறித்து வனத்துறை யினர் கூண்டுகள் வைத்து, சிறுத்தை புலியை பிடிக்காமல் அலட்சியம் காட்டு வதாகக்கூறி, ஆவேசமடைந்த அப்பகுதி யைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பரமத்தி வேலூர் - ஜேடர்பாளை யம் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கலையரசன், வட்டாட்சியர் தனலட்சுமி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சிறுத்தை புலியை பிடிப்பதற்கு கூண்டுகள் வைத்து உடனடி யாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

நாமக்கல், பிப்.5- பரமத்தி வேலூர் அருகே உள்ள இருக்கூர் பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப் பது கண்டறியப்பட்டுள்ளது. அதனை பிடிப்ப தற்கான அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், இருக்கூர் பகுதியில் சிறுத்தை புலி  நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அதனை பிடிப்பதற்காக வனத்துறை  சார்பில் மேற்கொண்டு வரும் நடவடிக்கை கள் குறித்து வனத்துறை அமைச்சர் மா.மதி வேந்தன் ஞாயிறன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது சிறுத்தை புலி நடமாட்டம் குறித்தும், வனத்துறை மூலம் சிறுத்தை புலியினை பிடிப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவ டிக்கைகள் குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் குறித் தும் அலுவலரிடம் அமைச்சர் மா.மதிவேந்த கேட்டறிந்தார்.

இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இருக்கூர் கிராமத்தில் கடந்த பிப்.3 ஆம் தேதியன்று நாய் ஒன்றை சிறுத்தை புலி கடித்து கொன்றுள்ளது. முன்னதாக ஜன.31 ஆம் தேதி அதன் நடமாட்டம் இருப் பது தெரியவந்தது. இத்தகவறிந்து வனத் துறையினர் 40க்கும் மேற்பட்டோர் இருக் கூர் கிராமத்தில் முகாமிட்டுள்ளனர். இதற் காக குறிப்பிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும், ஒரு கூண்டில் ஆட்டை கட்டி வைத்து சிறுத்தை புலியை பிடிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக நாமக்கல் மாவட் டத்தில் சிறுத்தை புலி நடமாட்டம் என்ற தக வல் இல்லை. தற்போது உறுதி செய்யப்பட் டுள்ளதால் அதனை பிடிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. பொதுமக்களை மாலை 6 மணிக்கு மேல் காலை 8 மணி வரை வீட்டிலிருந்து தனியாக வயல்வெளி பகுதிக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளோம். கால்நடை களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டு மென அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இவ்வாறு  அமைச்சர் மா.மதிவேந்தன் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட வன‌ அலுவ லர் கஷ்யப் ஆர்.ஷஷாந்த் உள்ளிட்ட வனத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.