மேட்டுப்பாளையம், மார்ச் 14- யானைகள் நடமாட்டத்தால் காட்டுயிர்கள் தாகம் தீர்க்க புதிய தண்ணீர் தொட்டிகள் கட்டுமானம் பணிகள் தாமதம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் வனச்சரகத்திற்கு உட் பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, காட்டெருது, மான் என ஏராளமான வன உயிரினங்கள் உள்ளன. இதில் யானைகளின் எண்ணிக்கை அதிகம். இவ்வனப்பகுதி முக்கிய வழித்தடப் பாதை என்பதால் வலசை செல்லும் யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருவது வழக்கம். கடந்த பருவ மழைக்காலங்களில் போதிய அளவில் மழை பெய்யாத காரணத் தினாலும் கடந்த ஒன்றரை மாத கால மாக வெயிலின் தாக்கம் முன் கூட்டியே துவங்கியதாலும் பசுமை யான இவ்வனப்பரப்பு தற்போது வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. வனப்பகுதியிலுள்ள உள்ள உயிரினங்களின் தாகம் தீர்க்கும் இயற்கையான வனக்குட்டைகள், நீரோடைகள் மற்றும் மழைநீர் வடி கால்கள் என அனைத்தும் வறண்டு வருவதால் யானைகள் உள்ளிட்ட காட்டுயிர்கள் தண்ணீர் தேடி வன எல்லையோரங்களில் வறட்சி காலத்தை சமாளிக்கும் வகையில் செயற்கையாய் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளை தேடி வர துவங்கியுள்ளன. இதனால், ஏற்கனவே கட்டப் பட்டிருந்த பழைய தண்ணீர் தொட்டி களை சீரமைக்கும் பணியிலும், புதிய தண்ணீர் தொட்டிகளை கட்டும் பணி யிலும் வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், மேட்டுப் பாளையம் அரசு மரக்கிடங்கு அருகே சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதி யில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்து மோட்டார் இயங்கி நீர் நிரப்பும் தானியங்கி வகையிலான சோலார் பேனல் வசதியுடன் கூடிய புதிய தண்ணீர் தொட்டி தற்போது கட்டப் பட்டு வருகிறது. இதற்கான கட்டு மான பணிகள் நடைபெறும் பகுதி யில் பகல் நேரங்களிலேயே யானை கள் நடமாடுவதும் இரவு நேரங்களில் யானைகள் கான்கரீட் போட பயன் படுத்தும் பலகைகள் மற்றும் இதர கட்டுமான பொருட்களை சேதப் படுத்தி செல்வதும் பணியாளர்களை அச்சமடைய வைத்துள்ளது. வனத்துறை ஊழியர்களின் கண் காணிப்போடு பகலில் சில மணி நேரங்கள் மட்டுமே இத்திட்டப் பணிகள் நடைபெறுவதால் புதிய தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணி தாமதமாகி வருகிறது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, கூடுதல் வனப்பணியா ளர்கள் நியமிக்கப்பட்டு தண்ணீர் தொட்டி கட்டும் வேலை விரைவுப் படுத்தப்படும் என்றனர்.