இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய உடு மலை தாலுகாவிற்குட்பட்ட, தளி பேரூ ராட்சி பகுதியில் பூச்சிகொட்டாம் பாறை, குருமலை, மேல்குருமலை மற்றும் திருமூர்த்திமலை பகுதிகள் அமைந் துள்ளது. இதேபோல், இங்கிருந்து கேரளா செல்லும் சின்னார் மலை பகுதி யில் கோடத்தூர், தளிச்சி மற்றும் கரட்டு பதி ஆகிய மலைவாழ் மக்கள் செட்டில் மெனட் பகுதிகள் அமைந்துள்ளது. இதை தொடர்ந்து, ஈசல்திட்டு, மாவுடப்பு மற்றும் குழிபட்டி என சுமார் இரண்டாயிரத் திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகள் அமைந்துள்ளன. இம்மக்களுக்கு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தங்களின் ஜனநாயக கடமையான வாக்களிக்கும் உரிமை உள்ளது. அதேநேரம், உள் ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் உரிமை மட்டுமே மறுக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக மலைவாழ் மக்கள் வசிக்கும் செட்டில்மென்ட் பகுதிகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படா மல் புறக்கணிக்கப்பட்டு வந்தனர்.
இந்த அவல நிலைக்கு எதிராக கடந்த பல வரு டங்களாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டங் களை நடத்தி வந்தனர். இச்சூழலில் தற்போது நடைபெற இருக்கின்ற உள் ளாட்சி தேர்தலில் அப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களும் வாக்களிக்கும் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. இதிலும் குறிப்பாக, திருமூர்த்தி மலை பகுதியில் உள்ள தளி பேரூ ராட்சியில் மலைவாழ் மக்கள் குடி யிருப்பு பகுதிகளுக்கு என இரண்டு வார்டு கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் குரு மலை, மேல்குருமலை மற்றும் பூச்சி கொட்டாம்பாறை குடியிருப்பு பகுதிகளி லுள்ள 385 வாக்காளர்களை உள்ளடக்கி 16 ஆவது வார்டாக அறிவிக்கப்பட்டுள் ளது. இதேபோல், திருமூர்த்திமலை குடி யிருப்பு பகுதியில் 234 வாக்காளர்களை கொண்டு 17 ஆவது வார்டு புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதியதாக உருவாக்கப் பட்ட இந்த இரண்டு வார்டுகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அதன்படி,16 ஆவது வார்டில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரான செல்வம் மற்றும் 17 ஆவது வார்டில் வாணிஸ்வரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர் கள் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகு திகளில் தங்களது வாக்கு சேகரிப்பு பணியை துவங்கியுள்ளனர். இந்நிலை யில், தங்களுக்கு வாக்குரிமை பெற்றுத் தந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு பேராதரவை அளிக்கும் வகையில் மலைவாழ் மக்கள் செங்கொடிகளை ஏந்தியவாறு மலை யெங்கும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக் காக வாக்கு சேகரித்து வருகின்றனர்.