கோவை, டிச.30- உடுமலை அருகே அடித்துக் கொலை செய்யப்பட்ட நரிக்குற வர் சமூகத்தைச் சேர்ந்த நபரின் குடும்பத்தை தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தினர் நேரில் சென்று ஆறுதல் கூறினார். திருப்பூர் மாவட்டம், உடும லையை அடுத்த தாந்தோணி கிரா மத்திற்கு குருவி வேட்டைக்கு சென்ற நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் மற்றும் குமார் ஆகிய இருவரை அப்பகு தியில் வசிக்கும் சிலர், கோழி திருட வந்ததாகக் கூறி கடுமையாக தாக்கினர். இதில் செங்கோட்டை யன் உயிரிழிந்தார். பலத்த காய மடைந்த குமார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்திற்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் டிசம்பர் 29ஆம் தேதி அன்று கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மேலும், கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலை யில், உயிரிழந்த செங்கோட்டை யனின் குடும்பத்தை, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித் துனர். இந்நிகழ்வில், சங்கத்தின் மாநி லச் செயலாளர் செல்வம், மாவட் டச் செயலாளர் வி.எஸ்.பரமசி வம், மார்க்சிஸ்ட் கட்சியின் பொள் ளாச்சி தாலுகாச் செயலாளர் அன்ப ரசன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் மகா லிங்கம், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் ஸ்டாலின் பழனிச்சாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தாலுகாத் தலைவர் மணியாழன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.