districts

எரிபொருள் தட்டுபாடு: வாகன ஓட்டிகள் அவதி

கோவை, ஏப்.11- வால்பாறையில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கு களில் எரிபொருள் இல்லாத தால் வாகன ஓட்டிகள் அவதி யடைந்தனர். கோவை மாவட்டம், வால் பாறை பகுதியில் இரண்டு பெட்ரோல் பங்குகள் இயங் கிய நிலையில், தற்போது நல்லகாத்து பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்க் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரே பெட்ரோல் பங்க் மட்டும் இயங்கி வருவதால் பல மணி  நேரம் எரிபொருள் இல்லாததால் வால்பாறை பகுதிக்கு சரக்கு கள் ஏற்றி வருகின்ற கனரக லாரிகள், கால் டாக்ஸி, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் எரிபொருள் இல்லாமல் தவித்த நிலையில், அனைத்து வாகனங்களும் நிறுத்தப் பட்டன. இதனால் அவசரத் தேவைக்கு உண்டான 108 வாகனம் மற்றும் அரசு சார்ந்த வாகனங்களுக்கு எரிபொருள் இல்லாமல் தவித்து வந்தனர். மேலும், இதுபோன்ற நிகழ்வு கள் வால்பாறை பகுதியில் அடிக்கடி நடைபெறுவதால் பங்க் உரிமையாளர்கள் சீரான எரிபொருள்களை குறித்த நேரத்தில் வழங்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.