நாமக்கல், செப்.1- நாமக்கல் அருகே குண்டும் குழியுமான சாலையால், சாலையில் அமர்ந்பத ல்லாங்குழி விளையாடும் வகையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையால் வாகன ஓட்டிகள் அன்றாடம் விபத்து ஏற்படுகிற நிலையில், உடனடியாக சாலையை செப்பனிட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையத்தில் சென்னை, கன்னி யாகுமரி வழித்தடத் திட்டத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி கள் நடைபெற்று வருகிறது. கிட்டத் தட்ட இரண்டு ஆண்டுகளாக இந்த மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் காரணமாக திருச்செங்கோடு சாலைக்கு செல்லும் வாகனங் கள் அனைத்தும் காகித ஆலை சாலை வழியாக திருச்செங்கோடு செல்வதற்கு திருப்பி விடப்பட் டுள்ளது. பள்ளிபாளையத்தி லிருந்து சங்ககிரி செல்லும் அனைத்து வாகனங்களும், வரு வாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே உள்ள மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. தற் போது பிரதான சாலையான பள்ளி பாளையம் ரவுண்டானா பகுதியில் மேம்பாலம் தூண் அமைக்கும் பணி கள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளின் போது அவ் வப்போது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுவதால், பிரதான சாலை முழுவதும் நீர் சூழ்ந்து காணப்படு கிறது. இதன் காரணமாக தார்ச் சாலை அனைத்தும் சேதமடைந்து பல்லாங்குழி சாலைகளாக மாறி உள்ளது. இதனால் இரவு நேரத் தில் வரும் வாகன ஓட்டிகள், சேதம் அடைந்த சாலை பகுதியில் வாக னங்களை பயணிக்கும் போது தடு மாறி கீழே விழுந்து காயமடை கின்றனர். எனவே, போர்க்கால அடிப் படையில் தார்ச்சாலையை செப் பனிட வேண்டும். குடிநீர் குழாய் உடைப்பை முழுமையாக சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டி களின் கோரிக்கையாக உள்ளது. மேம்பால கட்டுமான பணியில் உள்ள ஊழியர்களுக்கு பலமுறை அறிவுறுத்தியும், தொடர்ந்து குடி நீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வரு கிறது. உடைப்பை சரி செய்ய லாம் என நினைத்தால் போக்கு வரத்து பாதிப்பு ஏற்படும் என்ப தால் பணிகள் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. விரைவில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடங்கள் முழு மையாக சரி செய்யப்பட்டு, பணி யின்போது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படாமல் இருப்பதற் கான முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் கூடுதலாக மேற்கொள் ளப்படும் என நகராட்சி அதிகாரி கள் தெரிவித்தனர்.