districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சேதமடைந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி

ஈரோடு, டிச.23- ஈரோடு மாநகரில் பிரதான சாலைகள் சேதமடைந்து குண் டும், குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவ திக்குள்ளாகி வருகின்றனர். ஈரோடு மாநகரில் சத்தியமங்கலம் சாலை, பெருந் துறை சாலை, பள்ளிபாளையம் சாலை, சென்னிமலை செல் லும் சாலைகள் பிரதான சாலைகளாக உள்ளன. இந்த  சாலைகளைத்தான் கரூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை செல்லும் வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர். இதில், பெருந்துறை சாலை திண்டல் வரையும், அரசு மருத் துவமனை வழியாக சோலார் செல்லும் சாலை ரயில் நிலை யம் வரையும், பள்ளிபாளையம் சாலை காவிரி பாலம் வரை யும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.  இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரி கள் கூறுகையில், மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வரு வதால் சாலைகளை சீரமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அரசு  மருத்துவமனை முதல் ரயில் நிலையம் வரை மழைநீர் வடி கால் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த சாலை விரைவில்  சீரமைக்கப்படும். மேலும், மிகவும் மோசமான நிலையில்  உள்ள சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க திட்டமிடப் பட்டுள்ளது, என்றனர்.

நீலகிரி தைலம் தயாரிப்பு பணி தீவிரம்

உதகை, டிச.23- உதகையில் தற்போது பனியின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், நீலகிரி தைலம் உற்பத்தியும் தீவிரமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்துக் காணப்படும். இந்த  காலகட்டத்தில் அதிகளவு குளிர் நிலவுவ தால், பெரும்பாலான மக்கள் வெம்மை ஆடைகளையும், ஸ்வெட்டர், மப்ளர் உள் ளிட்ட குளிரைத் தாங்கும் ஆடைகளையும் அணிவது வழக்கம். அதிகப்பனி, குளிர் கார ணமாக சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல் என பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கம். இதனை சீர் செய்வ தற்காக நீலகிரியில் தயாரிக்கப்படும் நீல கிரி தைலம் அருமருந்தாகப் பயன்படு கிறது. தற்போது பனியின் தாக்கம் அதிகரிக் கத் தொடங்கிவிட்டதால் நீலகிரி தைலம் தயா ரிப்பும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நீல கிரி மாவட்டத்தில் தைலம் தயாரிக்கும் பணி யில் 20க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் ஈடு பட்டுள்ளன. இங்கு தயாராகும் தைலத்துக்கு அனைத்துப் பகுதிகளிலும் மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால், புதுதில்லி உட் பட பிற வெளி மாநிலங்களுக்கும் விற்ப னைக்கு அதிகளவு அனுப்பி வைக்கப்படு கிறது.

சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

தருமபுரி, டிச.23- தருமபுரி நகரம் ஜாகீதர் தெரு தார்ச்சாலை பழுத டைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டுமென மாவட்ட நிர் வாகத்திடம் பொதுமக்கள்  வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட 5 ஆவது வார்டு ஜாகீர் தெரு. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப் பகுதியில் ஏராளமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தருமபுரி  கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் இருந்து ஜாகீதர் தெரு வுக்கு செல்லும் சிமெண்ட் சாலை பழுதடைந்து, சாலை யின் ஒரு பகுதி கழிவுநீர் கால்வாயில் சரிந்துள்ளது. மழைநே ரங்களில் வாகனத்தில் வருவோர் கழிவுநீர் கால்வாயில் விழும்  நிலை உள்ளது. இதுகுறித்து நகராட்சியிடம் மனு அளித்தும்  எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, இந்த சாலையை  உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாவட்ட  நிர்வாகத்திடம்  பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கஞ்சா பறிமுதல்

கோவை, டிச.23- கிணத்துக்கடவு பகுதி யில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த வடமாநில வாலிபரை கைது செய்த போலீசார், அவர் மறைத்து வைத்திருந்த 8 கிலோ கஞ் சாவை பறிமுதல் செய்த னர். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதி யில் வடமாநில தொழிலாளர் கள் மற்றும் கல்லூரி மாண வர்கள் அதிகளவில் இருப் பதால், அவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கிணத்துக்கடவு பகுதிக்கு வந்த தனிப்படை போலீசார் கிருஷ்ணசாமிபுரம் பகுதி யில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அப் பகுதியில் உள்ள மயானத் திற்கு அருகில் சந்தேகப்ப டும் வகையில் நின்று கொண் டிருந்த இளைஞரை அழைத்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரிடம் சோதனை செய்தனர். அப் போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. மேலும், விசா ரித்ததில் அவர் ஒரிசா மாநி லம், சோன்பூர் மாவட்டத் தைச் சேர்ந்த மகேந்திரநாக் (24) என்பதும், ஒரிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கிணத்துக்கடவு பகு தியில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் மற்றும் கல் லூரி மாணவர்களுக்கும் விற் பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர் மறைத்து வைத்திருந்த 8 கிலோ கஞ் சாவை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து அவரை சிறையில் அடைத்தனர்.

மலைவாழ் மக்கள் குடியிருப்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை

உடுமலை, டிச.23- உடுமலையில் உள்ள மழைவாழ் மக்கள்  குடியிருப்புகளில், சிறப்பு மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உடுமலை மேற்குத் தொடர்ச்சி மலைப்ப குதியில் மாவடாப்பு, குழிப்பட்டி, குருமலை, கருமுட்டி, பூச்சிகொட்டாம்பாறை, திருமூர்த் திமலை, ஈசல்திட்டு, தளிச்சி, கோடந்தூர், கொட்டையாறு, பொருப்பாறு, ஆட்டுமலை,  வசம்குழம், புளியம்பட்டி, மயிலாடும்பாறை,  கரட்டுபதி, சேலையூத், காட்டுபட்டி உள்ளிட்ட  18 குடியிருப்பு பகுதிகள் உள்ளது. இதில், சில  குடியிருப்பு பகுதிகள் மலை அடிவாரப்பகுதி யிலும், அதிகமான குடியிருப்புக்கள் அடர்  வனப்பகுதியிலும் பல கிலோ மீட்டர் இடை வெளியில் இருக்கிறது. மேலும், மாவடாப்பு,  குழிப்பட்டி, குருமலை, பூச்சிக்கொட்டாம்பா றை மற்றும் மேல்குருமலை குடியிருப்புகள் ஓரே மலைப்பகுதியில் உள்ளது. இங்கு ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகி றார்கள். இப்பகுதி மக்கள் படிப்பு மற்றும்  மருத்துவ தேவைக்கு உடுமலை நகருக்கு வர  வேண்டும் என்றால் கோவை மாவட்டம் அட்ட கட்டி வழியாக சுமார் அறுபது கிலோ மீட்டர்  சுற்றித்தான் வர முடியும். மேலும், திருமூர்த்தி மலை வழியாக உடுமலை செல்ல   அடர் வனப் பகுதியில் நடந்து வர வேண்டும். இப்படி அடிப் படை வசதிகள் கிடைக்காமல் இருக்கும்  மக்களுக்கு, தற்பொழுது கேரள பகுதியில்  காய்ச்சல் பரவுவதாக வரும் செய்திகள் கவலை அளிக்கிறது. எனவே இக்குடியிருப்பு  பகுதிக்கு சிறப்பு மருத்துவக்குழு பரிசோ தனை செய்து, சிகிச்சை தர வேண்டும் என  மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்து உள் ளது.

அடிப்படை வசதிகள் செய்து தர சிபிஎம் வலியுறுத்தல்

உடுமலை, டிச.23- கொமரலிங்கம் பேரூராட்சி பெருமாள் புதூர் கிராமத்தின் அருகில் இருக்கும் ஜெ.ஜெ நகர் பகுதியில் அடிப்படை வசதி களைச் செய்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை வைத் துள்ளனர். மடத்துக்குளம் தாலூக்கா கொமரலிங் கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பொருமாள்பு தூர் ஜெ.ஜெ நகர் பகுதியில் 150க்கும்  மேற்பட்ட  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யின மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு  வசிக்கும் மக்களுக்கு அடிப்படை தேவை யான குடிநீர், சாக்கடை வசதிகளை செய்ய  வேண்டும் எனப் பலமுறை பேரூராட்சி நிர்வா கத்திற்குக் கோரிக்கை வைத்தும் நடவ டிக்கை எடுக்காததால் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்த முடிவு  செய்துள்ளனர்.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக் கையில், எங்கள் வசிப்பிடத்தில் அடிப்ப டைத் தேவையான குடிநீர், சாக்கடை வசதி  முறையாக இல்லை. மேலும், நியாயவிலை கடைக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு செல்ல வேண்டும். இங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளதால், தனி யாக அங்கன்வாடி கட்டிடம் மற்றும் சமுதாய  நலக்கூடம் கட்டித்தர வேண்டும் தெரிவித்த னர்.

கொள்கையை சொல்லத் துப்பில்லை: மக்களின் வறுமையை பயன்படுத்தி உறுப்பினர் சேர்க்கும் பாஜக

அவிநாசி, டிச.23- கொள்கையைச்சொன்னால் யாரும் அண்டக்கூட மாட்டார்கள் என்பதையறிந்து மக்களின் வறுமையை பயன்படுத்தி அரசின்  திட்டத்தை பாஜக தனது சொந்தப்பணத்தில் இருந்து தருவதுபோல ஏமாற்றி பாஜகவில் உறுப்பினராக சேர்த்து வருவது அம்பலமா கியுள்ளது. அவிநாசி ஒன்றியம், திருப்பூர் ஒன்றியம்,  திருமுருகன்பூண்டி நகராட்சி, அவிநாசி பேரூ ராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பாஜக அலுவல கங்களில், ஒரு லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய்  வரை கடன் வாங்கித் தருவதாக  விண்ணப்ப  படிவங்கள் வழங்கி வருகின்றனர். இதுகுறித்து விசாரிக்கையில், செருப்பு தைப்பவன் பிள்ளை செருப்புதான் தைக்க வேண்டும் என்கிற மநுவின் கோட்பாட்டை குலத்தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வ கர்மா யோஜன திட்டத்தைத்தான் தங்கள் கட் சியின் உறுப்பினராக்கும் திட்டத்திற்கு பயன் படுத்தி வருவது தெரியவந்துள்ளது. தமிழகம்  மட்டுமல்லாது நாடு முழுவதும் பாஜகவின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து  இயக்கம் நடத்தி வருகின்றனர். இதனை துண் டறிக்கையாக அச்சடித்து வீடுவீடாக பாஜகவி னர் விநியோகித்து வருகின்றனர். இதில்,  பத்துக்கும் மேற்பட்ட வேலை பிரிவினை களை பிரித்து இந்த வேலை செய்பவர் களுக்கு மட்டுமே கடன் கிடைப்பதாகவும், ஆவணங்களை எல்லாம் பாஜக அலுவ லகத்திற்கு எடுத்து செல்ல வேண்டுமாம். அங்கு சென்றவுடன் பாஜகவிற்கு மிஸ்டுகால்  கொடுத்து உறுப்பினராக வேண்டுமாம், அப் படி சேர்ந்தால் ஒரு லட்சத்தில் இருந்து இரண்டு லட்சம் வரையில் பணம் கிடைக்கும் என மக்களின் வறுமையை தங்களுக்கு சாதகமாக பாஜகவினர் பயன்படுத்தி வரு கின்றனர். அரசின் திட்டங்களை பாஜகவினர்  தங்களது சொந்த பணத்தில் இருந்து கடன்  கொடுப்பது போன்ற தோற்றத்தை உரு வாக்கி மக்களை ஏமாற்றி வரும் இதுபோன்ற  போலிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள முற் போக்கு அமைப்பினர் எச்சரித்து வருகின்ற னர்.

பொதுமக்களுக்கு சுமையை அதிகப்படுத்தும் மின்வாரிய அறிவிப்புகள்

உடுமலை, டிச.23- உடுமலை மின்வாரிய அலுவலகத்தில் கடந்த வராம்  முதல் மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக வரும் அறிவிப் புகளில், பொதுமக்கள் அக்டோபர் மாதம் செலுத்திய மின்கட் டணத்தையே நடப்பு மாதமும் செலுத்த வேண்டும் என்ற அறி விப்பு பொது மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும்  வகையில் உள்ளது. உடுமலை மின் வாரியத்தின் அறிவிப்பின் படி கண்ணம நாயக்கனூர் மற்றும் தொட்டியனூர் பகிர்மான மின் இணைப்பு களுக்கு அக்டோபர் மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே  இந்த மாதமும் செலுத்த  வேண்டும் என்று  அறிவித்து உள்ளது.  இதற்கு காரணம், மின் கணக்கீடு செய்யும் மின் வாரிய ஊழியர்களை வேறு வேலைக்கு பயன்படுத்தியது தான் என்று  தெரிய வருகிறது. இது போன்ற தவறு செய்த வாரிய அதிகாரி களால், பொது மக்களுக்கு சுமை ஏற்படுகிறது. இதைத்தொ டர்ந்து நான்கு மாதங்கள் மின் கணக்கீடு செய்யாமல், வரும்  மாதம் கணக்கீடு செய்யும் போது மின் உபயோகம் அதிகமாக  கணக்கீடு வரும். இதனால் மின் கட்டணம் பல மடங்கு அதிக மாக கட்ட வேண்டும்.இதுகுறித்து மின் வாரிய ஊழியர்களைக்  கேட்ட போது ஒரு வித மனச் சோர்வுடன் தான் வாரியத்தில்  வேலை செய்வதாகவும், வாரியத்தின் அனைத்து பிரிவுகளி லும் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது தான் காரணம் என்றார் கள். வாரியத்தின் இது போன்ற நடவடிக்கையால், வரும் மாதங்களில் அதிக மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை  பொது மக்களுக்கு ஏற்படும்.

வேலியில் சிக்கிய சிறுத்தை பலி

உதகை, டிச.23- கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தையின் பின்னங்கால் மற்றும் வால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிறுத்தை யால் எழுந்து நிற்க முடியாமல் சிறிது நேரத்தில் உயிரி ழந்தது. நீலகிரி மாவட்டம் உதகை அருகே அமைந்துள்ள தீட்டு கள் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட் டத்தில் சிறுத்தையின் சத்தம் கேட்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத் திற்கு வந்த வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் தேயிலை தோட்டத்தின் அருகே  சென்று பார்த்தபோது அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியில் கட்டப்பட்டிருந்த கிளட்ச் வயரில் சிறுத்தை சிக்கியிருந்தது. பின்னர் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிறுத் தைக்கு வலி நிவாரணி மற்றும் மயக்க ஊசி செலுத்தப்பட் டது. பின்னர் வனத்துறை வாகனத்தின் ஏற்றப்பட்ட சிறுத் தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மயக்கம் தெளிந்த பின் அடர்ந்த வனப் பகுதியில் விடுவிக்கும் முயற்சி யில் வனத்துறையினர் ஈடுபட்ட போது, சிறுத்தை வெளியேறா மல் கூண்டிலேயே உயிரிழந்தது.  இதனால் சிறுத்தையை பரிசோதனை செய்த கால்நடை மருத்துவர்கள் சிறுத்தையின் முதுகெலும்பு நரம்புகளில் ஏற் பட்ட காயம் காரணமாக பின்னங்கால்கள், வால் முற்றிலும் செயலிழந்ததால் சிறுத்தை உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சிறுத்தை வேலியில் சிக்கிய இடத்தில் வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும், வன விலங்கு உயிரிழப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரி வித்தனர்.

வாங்காத கடனை கட்டச் சொல்லி தொல்லை  நிதி நிறுவனத்துக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்

கோவை, டிச.23- வாங்காத கடனை கட்டச் சொல்லி வழக் கறிஞர் ஒருவருக்கு தொல்லை அளித்து வந்த பஜாஜ் பின்சர்வ் நிதி நிறுவனத்திற்கு நுகர் வோர் நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபரா தம் விதித்துள்ளது. கோவை, புலியகுளம் பகுதியைச் சேர்ந்த வர் வழக்கறிஞர் அப்துல் கரீம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பஜாஜ் பின்சர்வ்  நிதி நிறுவனத்தில் கடன் பெற்று, மடிக்கணினி, தொலைக்காட்சி உள்ளிட்டவை வாங்கியுள் ளார். பின்னர் அந்தக் கடன் தவணைகளை முறையாக செலுத்தியுள்ளார். பின்னர்,  கடனை செலுத்தியதற்கான தடையில்லா சான் றிதழையும் பெற்றுள்ளார். இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் கோவையில் உள்ள வழக்கறிஞர்களுக்கு ஒரு வங்கி கடன் வழங்க முகாம் நடத்தியுள் ளது. அப்போது அப்துல் கரீம் கடன் வாங்க  விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப் பத்தை நிராகரித்த வங்கி, கடன் வழங்க மறுத் துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வங்கி நிர்வாகத்தினரிடம் விசாரித்த போது, பஜாஜ் பின்சர்வ் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் தனிநபர் கடன் வாங்கியுள்ளதாகவும், அந்த கடனை முறையாக செலுத்தாத காரணத்தி னால் கடன் வழங்க முடியாது என தெரிவித் துள்ளனர். மேலும் சிபில் ஸ்கோர் குறைந்து இருப்பதால், இனி எந்த நிறுவனத்திலும் கடன் வாங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். அப்துல் கரீம் கடன் வாங்கவோ, அதற்காக விண்ணப்பிக்கவோ செய்யாத நிலையில், எப்படி தன் பெயரில் கடன் வந்தது என அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பஜாஜ் பின் சர்வ் நிதி நிறுவனத்திடம் சென்று அவர் விசா ரித்த போது, முறையான பதில் அளிக்க வில்லை. மேலும், ஒரு லட்சம் ரூபாய் கடனை செலுத் தக்கோரி பஜாஜ் பின்சர்வ் நிதி நிறுவனத் தினர் தொடர்ந்து குறுஞ்செய்திகள் மற்றும் தொலைப்பேசி அழைப்புகள் மூலம் தொல்லை அளித்து வந்துள்ளனர். அப்போது  தான் வாங்காத கடனை கட்ட முடியாது என  அவர் கூறிய நிலையிலும், அவரது வீட்டிற்கு  சென்று கடனை செலுத்துமாறு தொடர்ந்து தொல்லை அளித்துள்ளனர். இதனால் மன  உளைச்சலுக்கு ஆளான அப்துல் கரீம், வாங் காத கடனை கட்டச் சொல்லி மன உளைச்ச லுக்கு உள்ளாக்கிய பஜாஜ் பின்சர்வ் நிதி  நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும், தனக்கு இழப்பீடு வழங்க வேண் டும் எனவும் கோவை நுகர்வோர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பஜாஜ் பின்சர்வ் நிதி நிறுவனத்திற்கு ஒரு லட் சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், அதனை அப்துல் கரீமிற்கு வழங்குவதோடு, வழக்கு செலவிற்கு 5 ஆயிரம் ரூபாய் தர  வேண்டுமெனவும் உத்தரவிட்டது. பஜாஜ் பின் சர்வ் நிதி நிறுவனம் அபராத தொகையை உடனடியாக தனக்கு வழங்க வேண்டுமென வும், இல்லையெனில் நீதிமன்றத்தில் மேல்  நடவடிக்கை கோரி வழக்கு தாக்கல் செய்ய  உள்ளதாக அப்துல் கரீம் தெரிவித்தார்.