districts

img

மோட்டார் வாகன திருத்த சட்டம்: ஆட்டோ தொழிற்சங்கம் எதிர்ப்பு

சேலம், ஆக.25- புதிய மோட்டார் வாகன திருத்த சட் டத்தை அமல்படுத்தக்கூடாது என  வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர் கள் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்லைன் அபராதத்தை தடை  செய்ய வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும். அரசின் சார் பில் ஆட்டோ செயலியை உடனே துவங்க வேண்டும். தில்லி, மகா ராஷ்டிரா மாநிலங்கள் போல் பைக் டாக்ஸியை தடை செய்ய வேண் டும். மோட்டார் வாகன திருத்தச் சட் டத்தை அமல்படுத்தக்கூடாது. நோ.பார்க்கிங், புகைச்சான்று, எப்.சி. தாமதம் உள்ளிட்ட காரணங் களைக்கூறி ஆட்டோ தொழிலாளர் களிடம் ஆயிரக்கணக்கில் அபரா தம் விதித்து வசூலிப்பதை கைவிட வேண்டும். நலவாரிய பலன்களை காலதாமமின்றி வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிபடி புதிய ஆட் டோக்கள் வாங்குவதற்கு ரூ.10 ஆயி ரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி மாநி லம் முழுவதும் சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் வெள் ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். அதன்ஒருபகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்திற்கு ஆட்டோ தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் உதயகுமார் தலைமை வகித்தார். ஆட்டோ சங்கத் தலைவர் எஸ்.கே. தியாகராஜன், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடாபதி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இதில் சிஐடியு  மாவட்டப் பொருளாளர் இளங்கோ, நிர்வாகிகள் சி.மோகன், சி.கருப் பண்ணன், ஆட்டோ சங்க மாவட்டப் பொருளாளர் மகாதேவன் உட்பட திரளான ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

கோவை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் இரா.செல்வம் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளா ளர் ஆர்.வேலுச்சாமி, ஆட்டோ  தொழிலாளர் சங்க பொதுச்செயலா ளர் எம்.கே.முத்துக்குமார் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி  உரையாற்றினர். இதில் சிஐடியு  சாலை போக்குவரத்து ஊழியர் சங்க ரபீக், சாலையோர வியாபாரிகள்  சங்க ரத்தினக்குமார் உட்பட 200க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர் கள் கலந்து கொண்டனர். முடிவில், ஆட்டோ சங்க பொருளாளர் எம்.மைக்கேல் சாமி நன்றி கூறினார்.  

திருப்பூர்

திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக வெள்ளியன்று நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் துணைச் செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐ டியு ஆட்டோ தொழிலாளர் சங்க  மாவட்டச் செயலாளர் சிவராமன்,  சிஐடியு மாவட்டத் துணைத் தலை வர் ஒய்.அன்பு ஆகியோர் உரை யாற்றினர். இதில், சங்கத்தின்  துணைத்தலைவர் சி.பெருமாள் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.