districts

img

மூலனூரில் முருங்கை பவுடர் தொழிற்சாலை

விவசாயிகள் கோரிக்கை தாராபுரம், செப்.17- தாராபுரத்தை அடுத்த மூலனூரில் முருங்கை பவுடர் தொழிற்சாலை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டா ரத்தில் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடு பட்டு வருகின்றனர். தாராபுரம் வட்டத்திற் குட்பட்ட குண்டடம் பகுதியில் வெங்காய மும் மற்றும் மூலனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கை சாகுபடியும் அதிகள வில் நடைபெற்று வருகிறது. மூலனூரில் விளையும் முருங்கை, தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதற்கு கார ணம் இப்பகுதியின் மண்வளம், தட்பவெப்ப சூழ்நிலை ஆகும். மூலனூர் வட்டார பகுதி களில் சுமார் 430 ஹெக்டேர் அளவுக்கு முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் ஒரு ஹெக்டேரில் ஒரு வருடத்திற்கு 40 டன்  முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. இந்த  அளவிலான விளைச்சல் தமிழ்நாட்டில் எங்கும் இல்லை என கூறப்படுகிறது. குறிப் பாக, திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், மூல னூர், வெள்ளக்கோவில், முத்தூர் பகுதி களில் முருங்கை விவசாயம் முக்கிய தொழி லாக விளங்கி வருகிறது. இப்பகுதிகளில் செடி முருங்கை மற்றும் மரமுருங்கை அதிகளவில் பயிரிடப்படு கிறது.

செடி முருங்கை நீளமாகவும், சன்ன மாகவும் இருக்கும் மரமுருங்கை குட்டை யாகவும் கனமாகவும் இருக்கும். பிப்ரவரி தொடங்கி மே வரை உள்ள கோடை கால  பருவத்தில் முருங்கை விளைச்சல் வழக் கத்தை விட கூடுதலாக இருக்கும். இச்சம யத்தில் நாள்தோறும் முருங்கை காய்களை  அறுவடை செய்யும் சிறு மற்றும் குறு விவ சாயிகள் முட்டைகளாக அடுக்கி தாராபுரம் மற்றும் மூலனூர் சந்தைக்கு கொண்டு வரு கின்றனர். அங்கு உள்ளூர் மற்றும் வெளி யூர் விவசாயிகள் கொள்முதல் செய்து  அங்கிருந்து லாரிகள் மூலமாக ஒட்டன்சத்தி ரம் சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங் கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக் கும் அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த மே, ஜூன் மாதங்க ளில் சராசரியாக கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த முருங் கையின் விலை, தற்போது வரத்து அதிகரித்த தன் காரணமாக கிலோ ரூ.8க்கு விலை நிர்ண யம் செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படு கிறது. இதனால் விலை கட்டுப்படியாக வில்லை என விவசாயிகள் கவலை தெரி வித்துள்ளனர். எனவே, முருங்கைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயி களின் நீண்டநாள் கோரிக்கையான மூல னூரில் முருங்கை பவுடர் தொழிற்சாலை மற் றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.