சேலம், ஆக.4- சேலம் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட முன்னனி வேலையளிக்கும் தனியார் நிறு வனங்கள் பங்கேற்கும் இளைஞர்களுக் கான மாபெரும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ள தாக மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரி வித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சேலம் மாவட்டத்தில் சனியன்று மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதன், முன்னேற் பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலு வலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், தலைமை யில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இதில், “கலைஞர் 100” விழாவை முன்னிட்டு 2023 - 24 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தணியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களையும், சேலம் மாவட்டத்தில் மூன்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை யும் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் முதற்கட்ட மாக, சனியன்று சேலம், சோனா கல்விக் குழும வளாகத்தில் மாபெரும் சிறப்பு தனி யார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடை பெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி வங்கி சேவை கள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள் ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த டாடா எலக்ட்ராணிக்ஸ் லிட் வி டெக்னாலஜீஸ், யமாஹா, திரிவேணி கார் நிறுவனம், லோட் டஸ் மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம், பே டிஎம், ஆர்.வி.டிரேடர்ஸ், பாரத ஸ்டேட் வங்கி ஆயுள் காப்பீடு நிறுவனம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட முன்னனி வேலையளிக் கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணி யிடங்களுக்குத் தேவையான பணியாளர் களைத் தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாம் சேலம் ரயில்வே சந்திப்பு சாலையில் உள்ள சோனா கல்விக் குழும வளாகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறுகிறது. இம்முகா மில், அனைத்து விதமான கல்வித்தகுதி யினை உடையவர்களும் பங்கேற்கலாம் என தெரிவித்தார்.