தாராபுரம், டிச.5- மாணவர்களுக்கான கலை இலக் கிய திறனாய்வு போட்டிகள், தமுஎகச மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில், ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்கலை மன்றம், மத்திய அரிமா சங்கம், நகர அரிமா சங்கம், தாரபுரம் வர்த்தக கழகம், சுழற்சங்கம், விழுதுகள் அமைப்பு, தனி யார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் டிசம்பர் 22 முதல் 31 வரை பத்துநாட்கள் உடுலை சாலை அரிமா அரங்கத்தில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இதையொட்டி மாணவர்களுக்கான கலை இலக்கிய திறனாய்வு போட்டி கள் தாராபுரம் என்.சி.பி.நகராட்சி மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற னர். காலை 10 மணியிலிருந்து 11 மணி வரை ஓவியப்போட்டியும், 11 மணி முதல் 12 மணி வரை கட்டுரைப்போட் டியும் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தக கண்காட்சி நிறைவு நாளான டிசம்பர் 31 அன்று மாலை அரிமா அரங்கத்தில் ஊக்கத் தொகையும், நினைவுப் பரிசும், பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் களும் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை தமுஎகச மற்றும் பொதுநல அமைப்புகளை சேர்ந்த நிர் வாகிகள் செய்திருந்தனர்.