ஈரோடு, ஏப்.21- தாளவாடி அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச் சம் அடைந்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் இதுவரை பதிவாகாத 109 டிகிரி வெயில் ஈரோடு மாவட் டத்தில் பதிவாகி புதிய உச்சத்தை தொட்டது. வெயில் தாக்கத்திலி ருந்து தப்பிக்க குழந்தைகள், முதிய வர்கள் கடும் அவதி அடைந்து வரு கின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடி பகுதி யான தாளவாடி மலை பகுதியில் சனியன்று மதியம் தூரல் மழை யாக ஆரம்பித்து தாளவாடி மற் றும் சுற்று வட்டார பகுதிகளான இக் கலூர், சிக்கள்ளி, நெய்தாள புரம் திகினாரை, கும்டாபுரம், தொட்டகா ஜனூர் உள்ளிட்ட கிராமங்களில் 20 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது. இதனால் சிக்கள்ளி பகுதியில் விவசாய தோட்டத்தில் மழைநீர் தேங்கி அங்கு சிறு ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி யது. அதே போல் தாளவாடி அருகே பனகஹள்ளி கிராமத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்த தால் கிராமத்தில் உள்ள ஆசீப் (35), பிரகாஷ் (45), சிக்கராஜ் (48), வர தராஜ் (51), திகனாரை ஜோரகாடு சித்தராஜ் (40) என 5க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 10 ஆயிரத்திற் கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன. அறுவடைக்கு சில நாட்களே இருந்த நிலையில் 10 ஆயிரத்துக் கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் சேத மடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதே போல் பனகஹள்ளியில் இருந்து பையணாபுரம் செல்லும் சாலையில் உள்ள புளியமரம் முறிந்து விழுந்ததால் போக்குவ ரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள் ளாகினர். பின்பு நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் சம்பவ இடத் துக்கு வந்து மரத்தை வெட்டி அகற் றினர். பின்னர் போக்குவரத்து சீரா னது. தாளவாடி பகுதியில் மழை பெய்த அதே நேரத்தில் ஈரோடு மாந கர பகுதி பிறப்பகுதியில் வழக் கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. சனி யன்று ஈரோடு மாவட்டத்தில் 106 டிகிரி வெயில் பதிவானது. மாவட்டத்தில் ஒரு புறம் வெயி லின் தாக்கம் அதிகமாக இருந்தது. மற்றொரு புறம் தாளவாடி பகுதி யில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஒரே நாளில் இரு வேறுபட்ட காலநிலை மாற்றத்தால் ஒரு பகுதி மக்கள் கவலையும், இன் னொரு பகுதி மக்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர்.