districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தருமபுரியில் மஞ்சுவிரட்டு

தருமபுரி, ஜன.17- தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியில் பொங்கல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே சத்திரம் தெரு மெயின்ரோட்டில் மாட்டு பொங்கலையொட்டி மஞ்சு விரட்டு விழா நடைபெற்றது. இதில் ஆணங்கிணறு தெரு, பைபாஸ் ரோடு சந்தை வீதி, செவத்தம்பட்டி முகமதியர் தெரு என பல்வேறு பகுதியில் இருந்து 150- க்கு மேற்பட்ட  காளைகளுடன் வீரர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து காளைகள் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகளில் அவிழ்த்துவிடப்பட்டது. சீறிவரும் காளைகளை 200-க்கும் மேற்பட்ட இளை ஞர்கள், மாடுபிடி வீரர்கள் என திரண்டு வந்து அடக்கினர். இதில் 25-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட் டது. விழாவையொட்டி மாரண்டஅள்ளி போலீசார் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டனர். மஞ்சுவிரட்டு விழாவை காண மாரண்டஅள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 3  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி பலி

சேலம், ஜன.17- ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி தடுப்பணையில் விழுந்து  இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே லத்துவாடி விநா யகபுரம் தெருவில் வசிப்பவர் வெங்கடாசலம். விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சின்னம்மாள் (65).  இவர்களுக்கு திருமணம் ஆகி 2 மகள்கள், ஒரு மகன் உள்ள னர். செவ்வாயன்று மூதாட்டி ஆடு மேய்க்க சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து, லத்துவாடி பகுதியில் செல்லும் சுவேத  நதி தடுப்பணையில் சின்னம்மாள் இறந்து கிடப்பதாக, வெங்க டாசலத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.  பின்னர் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வீரகனூர் போலீசார், இறந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வீரக னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

உணவின் தரத்தை உறுதி செய்ய கண்காணிப்பு

உதகை, ஜன.17- உதகையில் உள்ள உணவு விடுதி கள், இறைச்சி கடைகளில் உணவு தரத்தை உறுதிப்படுத்த உணவு பாது காப்பு துறையினர் 5 சிறப்பு குழு  அமைத்து கண்காணிப்பை மேற் கொண்டு வருகின்றனர்.  நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற் றுலாத் தலமாக இருப்பதால் ஆண் டுக்கு சராசரியாக, 30 லட்சத்திற்கு  மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வந்து  செல்கின்றனர். கோடை சீசன்,தொடர் விடுமுறை சமயங்களில் சுற்றுலாப்  பயணிகளின் வருகை கணிசமாக  அதிகரிக்கிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்கும் விடுதிகள், உணவு வகை களில் கட்டண உயர்வு, தரமற்ற உணவு களை தடுப்பதும்,  எவ்வித குறைபா டும் இருக்கக் கூடாது, என மாவட்ட நிர் வாகம் அனைத்து துறைக்கும் சுற்ற றிக்கை அனுப்பி  கண்காணித்து வரு கிறது. குறிப்பாக, உணவு பாது காப்பு துறையினர் உணவு விடுதி, இறைச்சி, மீன் கடைகளில் திடீர் ஆய்வு  மூலம் விதிமீறல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத் தியுள்ளது. மேலும் தொட்டபெட்டா, சூட்டிங் மட்டம் சாலைகளில் விற்கப் படும் தேன், தைலம் விற்பனை உள் ளிட்டவைகளையும் தீவிரமாக கண்கா ணிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட் டுள்ளது.  இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர்  சுரேஷ் கூறுகையில், நீலகிரிக்கு சுற்று லாப்பயணிகளின் வருகை அதிகரிப் பால் தனி கவனம் செலுத்தப்படுகிறது. நடப்பாண்டு சீசனுக்கு முன்பாக  மாவட்ட நிர்வாகம் உத்தரவுப்படி, பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளது. 5 சிறப்பு குழுக்கள் அமைத்து திடீர் சோதனைகள் தீவிர படுத்தப்பட் டுள்ளது என்றார்.

காணும் பொங்கலை கொண்டாட காளிங்கராயன் அணைகட்டுக்கு வந்த மக்கள் ஏமாற்றம்

ஈரோடு,ஜன.17-  காளிங்கராயன் அணைகட்டில் காணும் பொங்கல் கொண்டாட வந்த  பொதுமக்கள் அணைக்கட்டு பகுதிக்கு  அனுமதிக்காததால் ஏமாற்றமடைந் தனர். பவானி அருகில் உள்ள காளிங்கரா யன்பாளையத்தில் பவானி ஆற்றின் குறுக்கே காளிங்கராயன் அணை உள் ளது. இந்த அணை கட்டில் இருந்து  பவானி ஆற்றின் இருந்து வெளியே றும் உபரிநீர் காலிங்கராயன் வாய்க் கால் வழியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாய நிலத்திற்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த அணைக்கட்டு பகுதியில் தைத்திருநாள் முடிந்த பிறகு காணும்  பொங்கல் உற்சாகமாக கொண்டாடு வது வழக்கம். இந்நாளில், பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள  ஏராளமான பொதுமக்கள் அணைக் கட்டு பகுதிக்கு வந்து காலை முதல் மாலை வரை தங்கி உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.  இந்நிலையில், அணைக்கட்டு பகுதி யில் அவிநாசி அத்திக்கடவு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகி றது. இதனையடுத்து, பாதுகாப்பு நல னுக்காக பொதுமக்கள் யாரும் அணைக்கட்டு பகுதிக்குள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த  2 ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டாவது அனு மதி கிடைக்கும் என காத்திருந்த பொது  மக்களுக்கு இந்த ஆண்டும், காலிங் கராயன் அணைக்கட்டு பகுதியில் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட் டுள்ளது. இது இப்பகுதி மக்களி டையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. இருப்பினும், திட்டப்பணி கள் நடைபெறுவதாலும், அணையின்  பாதுகாப்பு கருதியே அனுமதிக் கவில்லை என்பதை உணர்ந்து திரும் பிச்சென்றனர்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

கோவை, ஜன.17- கருமத்தம்பட்டி அருகே 13 சிறுமியை பாலியல் வன்கொ டுமை செய்த வாலிபரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீ சார் கைது செய்தனர். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே வசித்து  வருபவர் அரவிந்த் குமார் (27). இவர் வீட்டின் அருகே  வசித்து வந்த 13 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை யில் ஈடுபட்டுள்ளார்.  இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய அதி காரிகள், விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார், அரவிந்த்கு மாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது  செய்தனர்.

விபத்தில் தொழிலாளி பலி 

தருமபுரி, ஜன. 17- மதிகோன்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகு தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், செட்டிக்கரை அடுத்த காந்திபாளை யம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (29). சென்டரிங் தொழிலாளியான இவர், தருமபுரி திருப்பத்தூர் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, மதிகோன்பாளையம் காவல் நிலையம் அருகே  சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில், மின்கம்பத் தில் மோதி தலையில் காயமடைந்து மயக்கமடைந்தார். இதைத்தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு கார்த்திகேயனை சோதனை செய்த மருத்து வர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இவ்விபத்து குறித்து தருமபுரி நகர காவல்நிலைய போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின் றனர்.

ரூ.30 லட்சம் மோசடி: 4 பேர் கைது

திருப்பூர் ஜன.17- திருப்பூர் எஸ்.வி.காலனியைச் சேர்ந்தவர் பாலாஜி பிரிய தர்ஷன் (30), சூர்யா நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (37).  இருவரும் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த வர்களிடம் நூல் வாங்கி வியாபாரம் செய்துவந்தனர். ஆன் லைன் மூலமாக குறைந்த அளவு பணத்தைக் கட்டி நூலைப்  பெற்றுவந்தனர். இதனிடையே, கடந்த ஆண்டு இறுதியில்  அதிக அளவில் நூல் தேவைப்பட்டதால் கொல்கத்தாவைச் சேர்ந்த வியாபாரிகளைத் தொடர்புகொண்டுள்ளனர். அதற்கு, அவர்கள் கொல்கத்தா வருமாறு தெரிவித்ததை யடுத்து பாலாஜி பிரியதர்ஷனும், சதீஷ்குமாரும் வெவ்வேறு  நாள்களில் கொல்கத்தாவுக்குச் சென்றுள்ளனர். இருவரிட மும் ரூ.30 லட்சம் வரை பெற்றுக்கொண்ட அஜய்தும் (32),  ஆகாஷ்தாஸ்(34), அர்ஜுன் ராய் (26), ஷிர்வாணி பாபு (58)  ஆகிய 4 பேரும் நூலைக் கொடுக்காமல் காலம்தாழ்த்தி வந்த துடன், மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப் பட்ட இருவரும் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார்  அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய காவல் துறை யினர் கொல்கத்தாவுக்கு சென்று வியாபாரிகளிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த மேற்கண்ட 4 பேரையும் கைது செய்து  திருப்பூருக்கு திங்கள்கிழமை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

223 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து

திருப்பூர், ஜன.17-  பல்லடத்தில் கடந்த நவம் பர், டிசம்பர் ஆகிய இரண்டு  மாதங்களில் மேற்கொள்ளப் பட்ட வாகனச் சோதனையில்  இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல்  சென்ற 108 பேர், மதுபோதை யில் வாகனங்கள் இயக்கிய  60 பேர், போக்குவரத்து சிக் னலை பின்பற்றாமல் சென் றது உள்ளிட்ட போக்குவ ரத்து விதிகளை மீறிய 842  பேர் மீது வழக்குப் பதிவு  செய்யப்பட்டது. அவர்களி டமிருந்து ரூ.1 லட்சத்து 89 ஆயிரத்து 500 அபராதம் வசூ லிக்கப்பட்டது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 223 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய் யப்பட்டுள்ளது என்று பல்ல டம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.

பெண் கொலை: 3 பேர் கைது

தருமபுரி, ஜன.17-  பென்னாகரத்தில் மர்மமான முறையில் பெண் கொலை  செய்யப்பட்ட விவகாரத்தில் ஹோமியோபதி பெண் மருத்து வர் உள்ளிட்ட மூன்று பேரை தனிப்படை பிரிவு போலீசார் கைது  செய்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் நாகமரை பகுதி யைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி சுமதி  (42). இவர் கடந்த சனிக்கிழமையன்று தலையில் தாக்கப் பட்டு கைகள் அறுக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணாகரம் போலீ சார் நிகழ்வு இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன்தே சுபாதம் உத்தரவின் பேரில், பென்னாகரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் மகாலட்சுமி தலைமையில் தனி பிரிவு அமைக்கப்பட்டு கொலை குறித்து தீவிர விசாரணை மேற் கொள்ள உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, தனிப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் ஓசூர் தேர் பேட்டை பகுதி யில் வசித்து வரும் சுமதியின் தம்பி மனைவியும், ஹோமி யோபதி மருத்துவருமான இந்திர குமாரி (40), இவரு டைய தம்பி அரவிந்த் (18), அரவிந்தின் நண்பர் 17 வயது டைய சிறுவன் உட்பட மூவரும் கொலையில் சம்மந்தப் பட்டிருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, மூவரை யும் தனிப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி னர். அதில், பென்னாகரம் பகுதியில் தங்கி இருந்த சும தியை கண்டிக்க வேண்டும் என இந்திரகுமாரி தனது தம்பியி டம் தெரிவித்துள்ளதும், ஆனால், அரவிந்த் மற்றும் அவரு டைய நண்பர் ஆகிய இருவரும் சுமதியை கண்டிக்காமல் கத்தி யால் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர். இந்திரா குமா ரியை சேலம் பெண்கள் சிறையிலும், அரவிந்தை மத்திய சிறை யிலும், 17 வயதுடைய சிறுவனை இளம் சிறார் கூர்நோக்கு  இல்லத்திலும் அடைத்தனர்.

சிற்றுந்துகளில் கட்டண கொள்ளை

ஈரோடு, ஜன. 17- ஈரோட்டில் இயங்கும் தனியார் சிற்றுந்தில் பொதுமக்களிடம் கட்டண  கொள்ளை நடப்பதாக புகார் எழுந்த  நிலையில், இதன் வீடியோ காட்சி கள் தற்போது சமூக வலைதளங்க ளில் வைரலாகி வருகிறது.  தமிழகத்தில் அரசு போக்கு வரத்து கழகங்கள் நகர்ப்புறம் மற் றும் புறநகர் பேருந்துகளை இயக்கி  வருவதைப் போல கிராமப் பகுதிக ளுக்கும், அரசு பேருந்துகள் செல் லாத நகரப்பகுதிகளுக்கு சிற்றுந்து கள் இயக்கப்படுகின்றன. தனியார்  மட்டுமே நடத்தும் இந்த சிற்றுந்து கள் குறைந்த தொலைவே இயக்கப் படுகின்றன. இதில் ஒன்று ஈரோடு மாந கரத்தில் இயக்கப்படும் பிகேஎன் என்ற சிற்றுந்து. ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் வழியாக வெண்டிபாளையம் வரை இப்பேருந்து இயக்கப்படுகிறது. இதில் கடந்த சில நாட்களாக பய ணிகளிடம் பெறப்படும் கட்டணத்திற்கு உரிய பயணச் சீட்டு வழங்கப்ப டுவதில்லை என்று பயணிகள் மத்தி யல் புகார் எழுந்தது. இந்நிலையில் பொங்கல் போன்ற  திருவிழா காலங்களில் தனியார் பேருந்துகள் குறிப்பாக ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளை அடிப்பதும், அவற்றைத் தடுப்ப தும் சாதாரண நிகழ்வாகி விட்டது.  அதுபோல பிகேஎன் சிற்றுந்தும் சொகுசுப் பேருந்து என்றும், ஈரோடு  30 சூப்பர் சர்வீஸ் என்றும் குறிப்பிட்டு இயக்கப்படுகிறது. இதில் வழங்கப் படும் பயணச் சீட்டில் ரூ.2 என குறிக் கப்பட்டிருக்கிறது. இது உயர்த்தப் பட்டு பல மாதங்கள் ஆகிறது.  ஆகவே அப்போது அச்சடிக்கப் பட்ட பயணச் சீட்டுகள் காலாவதி யாகிவிட்டன. அவற்றை பயன்ப டுத்த விரும்பும் நிர்வாகம் அதனைத்  திருத்தி, பெறும் கட்டணத்திற்கான எண்களை சீல் வைத்து விநியோ கித்து வந்தனர். ஆனால் அதிலிருந்து  மாறாத பிகேஎன் நிர்வாகம் ரூ.2 க் கான பயணச் சீட்டையே பயணிக ளுக்கு வழங்கி வருகிறது. புழக்கத் தில் இல்லாத கட்டணத்திற்கான பய ணச்சீட்டை அளிக்கும் நிர்வாகம், சம் பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு எவ்வாறு  உண்மையான கணக்கை கொடுக் கும். எப்படி சம்பந்தப்பட்ட அரசு நிர் வாகம் இதனை அனுமதிக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்க ளையும், அரசையும் ஒரு சேர ஏமாற் றும் தனியார் சிற்றுந்து நிர்வா கத்தின் நடவடிக்கை குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்

கோவை,ஜன. 17- கேலோ இந்தியா போட்டிகளில் தென் மண்டலம் அளவிலான பெண்கள்  வுஷு போட்டிகள் கோவை கே.பி.ஆர்  பொறியியல்  கல்லூரியில் புதன்கிழமை  துவங்கியது. இப்போட்டிகள், 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இதுகுறித்து, வுஷு அமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பி னர் சபீர் கூறுகையில், மத்திய அரசின்  விளையாட்டு  துறையின் முன்னெடுப் பாக கேலோ இந்தியா என்கிற திட்டம்  செயல்படுத்தப்படுகிறது.  விளையாட்டு  துறையில் பெண் வீராங்கனைகள் தங்க ளது திறமைகளை தேசிய அளவில் வெளிப்படுத்த இது வாய்ப்பாக உள் ளது. இப்போட்டிகளின் ஒரு பகுதியாக  பெண்கள் வுஷு சாம்பியன்ஷிப் போட் டிகள் நடைபெறுகிறது. இப்போட்டி கள் ஒவ்வொரு ஆண்டும் மண்டல அள விலும் இறுதிப்போட்டிகள் தேசிய  அளவிலும் நடைபெற்று வருகின்றன.  வடக்கு மண்டல அளவிலான போட்டி கள் உத்ரகாண்ட் மாநிலத்திலும், கிழக்கு  மண்டல அளவிலான போட்டிகள் அஸ் ஸாம் மாநிலத்திலும், மேற்கு மண்டல  அளவிலான போட்டிகள் கோவாவி லும் மற்றும் தெற்கு மண்டல அளவி லான போட்டிகள் தமிழ்நாட்டிலும் நடை பெறுகின்றன. அதன்படி 2024 ஆம் ஆண்டிற்கான தென் மண்டல அளவிலான பெண்கள் வுஷு சாம்பியன்ஷிப் போட்டிகள் தமிழ்நாட்டில் கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை “ஆஸ்மிதா” அமைப்புடன் தமிழ்நாடு வுஷு ஆசொசியேஷன் மற்றும் கே.பி .ஆர் பொறியியல் கல்லூரி ஒருங்கி ணைந்து நடத்துகின்றனர். இதில் மொத் தம் 9 மாநிலங்கள் இருந்து சுமார் 600  வீராங்கனைகள்  சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனி யர் என 3 பிரிவுகளில் பங்கேற்கின்ற னர். மண்டல அளவில் நடத்தப்படும் இப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் தேசிய அளவில் நடை பெறும் கேலோ இந்தியா பெண்கள் வுஷு போட்டியில் பங்கேற்பார்கள் வெற்றி பெற்றவர்களுக்க சான்றி தழ்கள், பதக்கங்கள் மற்றும் பண முடிப் ப்புகள் வழங்கப்படும் என்றார்.

குடியரசு தினவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கோவை, ,ஜன.17- குடியரசு தின விழா நெருங்கி வரு வதையொட்டி, தமிழகம் முழுவ தும் போலீசார் பாதுகாப்பு ஏற்பா டுகளை தீவிரப்படுத்தி வருகின்ற னர். இதன்ஒருபகுதியாக கோவை,  தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவ டட்ங்களில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு சோதனையில் ஈடுப்பட் டனர்.  கோவை மாநகரில் உள்ள முக் கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு  பிரிவு போலிசர் புதனன்று கோனி யம்மன் கோவிலில் வெடிகுண்டு நிபு ணர்கள் மோப்பநாய் மற்றும் வெடி பொருட்களை கண்டறியும் கருவிக் கொண்டு கோவில் வளாகத்தை சுற்றி லும் சோதனை செய்தனர். 4 தனிப்ப டைகள் அமைத்து கோட்டை ஈஸ்வ ரன் கோவில்,மருதமலை முருகன் கோவில், கோவை மத்திய ரயில்  நிலையம், வடகோவை ரயில் நிலை யம், பேருந்து நிலையங்கள், பெரும்  வணிக வளாகம், அரசு மருத்து வமனை மற்றும் திரையரங்குகள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பகுதி கள் தொடர்ந்து பரிசோதனை செய் யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரு கின்றதாக போலிசார் தெரிவித்தனர்.  நாமக்கல் மாவட்ட சுற்றுவட்டா ரப் பகுதியில் குடியரசு தின விழாவை  முன்னிட்டு, மக்கள் அதிகம் நடமாட  கூடிய இடங்களில் தீவிர சோத னைகள் மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம் கடைவீதி, முக்கிய சந்திப்புகள் மற் றும் வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களில் குற்றத்தடுப்பு காவலர் கள் மற்றும் வெடிபொருள் கண்டு பிடித்தல், செயலிழக்கச் செய்யும் போலீசாரால் சோதனை மேற்கொள் ளப்பட்டு வருகிறது.  இதேபோன்று, தருமபுரி மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன்ஜேசுபாதம் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையானது ஜன. 13 ஆம் தேதி முதல் ஜனவரி 26 ஆம்  தேதி வரை மாவட்டத்தின் முக்கிய  இடங்களில் மேற்கொள்ளப் படுகிறது.  மக்கள் அதிகம் கூடும் இடங்க ளான தருமபுரி ரயில் நிலையம், பேருந்து நிலையம், அரசு மருத்து வமனை, கடைவீதி உள்ளிட்ட இடங்க ளில் சோதனை நடைபெற்றது. தரும புரி வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற் கொண்டனர்.