districts

தமிழக மக்களின் துயரத்தில் பங்கெடுக்காத மோடி - இரா.முத்தரசன் பேச்சு

தருமபுரி, ஏப்.4- தமிழ்நாட்டு மக்களின் துயரங் களில் பங்கேற்காமல், ஓட்டுக்காக பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வர  தார்மீக உரிமை இல்லை என சிபிஐ  மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன் தெரிவித்துள்ளார். தருமபுரி நாடாளுமன்ற தொகு தியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து, இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தரு மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் பிரச்சார பொதுக்கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு சிபிஐ  மாவட்டச் செயலாளர் கலைச்செல் வன் தலைமை வகித்தார். இந்நி கழ்ச்சியில் கலந்து கொண்ட இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், வரும் தேர்தல் அனைத்து தேர்தல்களை காட்டி லும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜனநாயகம் நிலைக்க வேண்டும் என்றால், ஏப்.19 ஆம் தேதி நடைபெறுகின்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். இப்பொழுது நாட்டில் ஜனநாயகத்திற்கு புறம்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜனநாயக நாட்டில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சி இல்லாத நாட்டை உரு வாக்க ஆர்எஸ்எஸ் முயல்கிறது. அரசியல் கட்சியினரை வருமா னவரித்துறை, அமலாக்கத்துறை மூலம் மோடியின் அரசாங்கம் அச்சு றுத்த நினைக்கிறது. மோடியின் ஏவல்களாக தன்னிச்சையாக செயல்படக்கூடிய அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளது. கடந்த கால  நீதிமன்ற தீர்ப்புகள் நீதிமன்றங் களின் நம்பக தன்மையை கேள்விக் குறியாகி உள்ளது. தேர்தல் சுதந்தி ரமாக நடத்தப்பட வேண்டும். ஆர் எஸ்எஸ் ஜனநாயகத்திற்கு பேரா பத்து. மதச்சார்பின்மைக்கு எதிராக தொடர்ந்து பாஜக செயல்பட்டு வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியா கூட்டணி எதிர்த்தது. அதிமுக எதிர்த்து வாக்களித்திருந்தால் சட்டம் தோற் கடிக்கப்பட்டிருக்கும். ஆனால், அதிமுக பாஜகவுடன் கள்ளக் கூட்டணி அமைத்துள்ளது. பாமக,  பாஜகவுடன் எதற்காக இணைந் தது சந்தர்ப்பவாத கூட்டணி. மாறாக, மக்கள் கொள்கை அடிப்ப டையில் உருவாக்கப்பட்ட அணி ‘இந்தியா’. பிரதமர் மோடி தமிழ் நாட்டிற்கு வர தார்மீக உரிமை இல்லை. தமிழ்நாட்டின் மக்கள் துய ரங்களில் பங்கேற்காமல், தேர்த லில் மட்டும் பாஜகவிற்கு ஓட்டு மட் டும் வேண்டுமா? தமிழ்நாட்டு மக் கள் ஏமாளிகள் அல்ல, என்றார். இக்கூட்டத்தில், திமுக வேட்பா ளர் ஆ.மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தேவராஜன், தமிழ் நாடு பழங்குடியினர் சங்க சிறப்பு தலைவர் ந.நஞ்சப்பன், திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் தடங் கம் சுப்ரமணி, முன்னாள் மாவட்ட  பொறுப்பாளர் பி.என்.பி.இன்பசே கரன் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். சேலம் இந்தியா கூட்டணி சார்பில்  சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி  எம் செல்வ கணபதி அவர்களை ஆத ரித்து பிரச்சாரத்தில்  சிபிஐ மாநில  செயலாளர் முத்தரசன் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், 2014ல் கொடுத்த வாக்குறுதிகளை மோடி 10 ஆண்டுகளாகியும் நிறைவேற்றவில்லை.மாறாக  விலைவாசி மட்டும் உயர்ந்துள் ளது. ஊழலை பற்றி பேச மோடிக்கு  கடுகளவு கூட தகுதி இல்லை. தேர் தல் பத்திர ஊழல், சாலை அமைத் ததில் ஊழல், கொரோனா உயிரி ழப்பு நிதியில் ஊழல் செய்தது பாஜக.மீண்டும் மீண்டும் மோடி தமிழ்நாடு வருகிறார். பேரிடர் காலத்தில் தமிழ்நாட்டிற்கு எவ்வ ளவு நிதியை வழங்கினார் என அவர்  தெரிவிக்க வேண்டும். மாநில உரி மைகளை பாஜக முற்றிலும் பறித்து  கொண்டது. பாஜகவிற்கு உறுதுணையாக இருந்த அதிமுகவும் இந்த தேர்த லில்தோற்கடிக்கப் படுவார்கள் என்றார். இந்த பிரச்சாரத்தின் போது, இந்தியா கூட்டணி கட்சி களின் தலைவர்கள் பங்கேற்றனர்.