திருப்பூர், மார்ச் 4 - ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித் தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்குவதை நிறுத் தக் கோரியும் விவசாயிகள் மற்றும் தொழிற்சங்கத்தின் சார்பில் குடிமங்க லம் ஒன்றிய பகுதிகளில் சனியன்று நடை பயண பிரச்சாரம் நடை பெற்றது. இந்த பிரச்சார பயணத்தில், உல கம் முழுவதும் கடுமையைன பொரு ளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது மக்க ளையும் நாட்டையும் காப்பற்றிய பொதுத்துறை நிறுவனங்களை சில முதலாளிகளின் நலனை பாதுக்காக் கும் வகையில், லாபம் தரும் பொதுத் துறை நிறுவனங்களை விற்பதை தடுக்க வேண்டியும், தொழிலாளர் தொகுப்பு சட்டம் நான்கையும் திரும்பப் பெற வேண்டும். விவசா யிகளின் நலன் கருதி மின்சார திருத்த மசோதா 2022 ஐ திருப்ப பெற வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி பிரச்சார பய ணம் நடைபெற்றது. முன்னதாக வி. வல்லக்குண்டாபு ரத்தில் தொடங்கி பெதப்பம்பட்டி பகு தியில் நிறைவு பெற்ற பிரச்சார பய ணத்திற்கு குடிமங்கலம் பகுதியின் விவசாய சங்க ஒன்றிய தலைவர் சுந்தர்ராஜ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் வலுப்பூ ரான் ஆகியோர் தலைமை ஏற்றனர். பிரச்சார பயணத்தை விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் அ.பஞ்சலிங்கம் துவக்கி வைத் தர். விவசாய சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், விவசாய சங்க நிர்வாகிகள் ஸ்ரீதர், மகேந்தி ரன், விஜயகுமார், விவசாய தொழி லாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தம்பு ராஜ், பழனிசாமி, ஆறுமுகம் சிஐடியு சங்கத்தின் நிர்வாகிகள் சுப்பிரமணி யம், பிரபாகரன் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.