உடுமலை, மார்ச்.2- ஒன்றிய மோடி அரசின் விவசாய விரோத கொள்கைகளை விளக்கும் வகையில், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மடத்துக்குளம் தாலுகா குழு சார்பில் சனியன்று கருத்தரங் கம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மடத்துக்கு ளம் தாலுகா தலைவர் வி.ராஜரத்தினம் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், தாலுகா பொருளாளர் வெள்ளி யங்கிரி வரவேற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நட ராஜன், மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூத னன், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், பொருளாளர் அ.பாலதண்டபாணி, திமுக மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் இரா.ஜெயராமகிருஷ்ணன், மேற்கு ஒன் றிய செயலாளர் ஈஸ்வரசாமி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க துணைத் தலைவர் எஸ்.பர மசிவம், மடத்துக்குளம் தாலுக்கா செயலா ளர் எம்.எம்.வீரப்பன் உள்ளிட்டோர் ஒன்றிய மோடி அரசின் விவசாய விரோத கொள்கை களை விளக்கி பேசினர். இதில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்வில் மடத்துக் குளம் தாலுக்கா குழு சார்பில் உழவன் உரிமை ஆண்டு சந்தா 50க்கான தொகை ரூ.9 ஆயிரம், அகில இந்திய கட்டிட நிதியாக ரூ.10 ஆயிரம், உடுமலை தாலுக்கா குழு சார்பில் ரூ.10 ஆயிரம், ஊத்துக்குளி தாலுக்கா குழு சார்பில் ரூ.5 ஆயிரம் மாநில பொதுச் செயலா ளரிடம் அளிக்கப்பட்டது.