கோவை, மார்ச் 10- நரேந்திர மோடி ஊழலை பற்றி பேசுவதற்கு கிஞ்சிற்றும் அருகதை அற்றவர் எனவும், தமிழகத்தில் வாக்கு கேட்கிற தார்மீக உரிமை மோடிக்கு இல்லை எனவும் இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்த ரசன் கோவையில் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நாடாளுமன் றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்ப டவும், ஜனநாயகத்தை காப்பாற்ற வும், அரசியல் அமைப்புச் சட்டத் தால் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப் புகள் பாதுகாக்கவும், மோடி தலை மையிலான ஆட்சியை அகற்ற வேண்டும். இல்லை என்றால் நாடு பேராபத்தை சந்திக்கும். இந்தியா கூட்டணி ஏற்பட தமிழ் நாடு தான் முக்கிய காரணம். திமுக கூட்டணியில் அங்கம் பெற்று இருக் கிற கட்சிகள் உடனான தொகுதி பங்கீடு சனியன்று முடிவடைந்துள் ளது. இந்திய அளவிலும் நல்ல கூட்டணி உருவாகி இருக்கிறது. பீகார், உத்திரபிரதேசம், மத்திய பிர தேசம் ஆகிய மாநிலங்களிலும் தொகுதி உடன்பாடுகள் நல்ல முறையில் ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலை இந்தியா கூட்டணி கொள்கை ரீதியாக எதிர்கொள் ளும். பாரதிய ஜனதா கட்சியின் அரா ஜகங்களுக்கு இந்த தேர்தல் ஒர் முற் றுப்புள்ளி வைக்கும். நாடாளுமன் றத் தேர்தல் தேதி இன்னும் அறி விக்க சில நாட்களே உள்ள நிலை யில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென்று ராஜி னாமா செய்திருக்கிறார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டி ருக்கிறது. அவர் ஏன்? ராஜினாமா செய்தார். மூன்று பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தில் ஏற்க னவே ஒருவர், ராஜினாமா செய்து விட்டார். தற்போது அருண் கோய லும் ராஜினாமா செய்திருக்கிறார். தற்போது தலைவர் மட்டுமே மீதம் இருக்கிறார். எனவே, வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் ஒரு ஜன நாயக முறையில் நடைபெறுமா? என்கின்ற ஒரு மிகப்பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் நாடு முழுவதும் பய ணம் மேற்கொள்கிறார். அப்போ தெல்லாம் ஊழல் பற்றி அவர் பேசு கிறார். ஊழலுக்கு எதிராக நடவ டிக்கை எடுப்பதை இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஆனால், தேர்தல் பத்திரம் மூலம் மிகப் பெரிய அளவில் ஆதாயம் பெற்ற கட்சி, பாரதிய ஜனதா கட்சி. சுமார் 60 சதவீதம் வரை நிதி பெற்று இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் இது தவறானது, மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரம் யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என் பதை அறிவிக்க வேண்டும், மார்ச் 13ஆம் தேதிக்குள் வலைதளங்க ளில் வெளியிட வேண்டும் என ஸ்டேட் வங்கிக்கு அறிவுறுத்தி உள் ளது. ஆனால், ஸ்டேட் வங்கி கால அவகாசம் கேட்டுள்ளது. இந்த கால அவகாசம் கேட்கச் சொன்னது யார்? ஒன்றிய அரசு தான் அவகாசம் கேட் கச் சொல்லி இருக்க வேண்டும். பெற்ற நிதியின் மூலம் அந்த ஊழல் அம்பலமாகிவிடும் என்ப தால் அவர்கள் ஸ்டேட் வங்கியை அவகாசம் கேட்க வலியுறுத்தி இருக்கக்கூடும். இத்தகைய ஊழ லில் ஈடுபட்டிருக்கக் கூடிய நரேந் திர மோடி ஊழலை பற்றி பேசுவ தற்கு கிஞ்சிற்றும் அருகதை அற்ற வர் என்பதை தெரிவித்துக் கொள்கி றேன். உச்சநீதிமன்றம் கால அவகா சத்தை ஏற்கக் கூடாது என்றும் கேட் டுக்கொள்கிறேன். பிரதமர் நிவாரண நிதி என்ற ஒரு நிதி மத்திய அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது. அது நிவாரண பணிகளுக்கு பயன்ப டுத்தப்படும். அதற்கு வரவு செலவு கணக்கு உண்டு. தகவல் உரிமைச் சட்டத்திலும் கேட்டு பெற முடியும். அந்த நடைமுறை மோடி பிரதமர் ஆன பிறகு, கலைக்கப் பட்டு பி.எம் கேர் என்ற ஒரு புதிய நிதி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதில் எவ்வளவு நிதி வந்தது, எங்க போனது என்பதை யாரும் கேட்க முடியாது. இதைக் காட்டிலும் பெரிய ஊழல் என்னவாக இருக்க முடியும்.
இந்தியாவில் இருக்கிற 140 கோடி மக்களும் என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று மோடி பேசு கிறார். குடும்பத்தை பற்றி எல்லாம் பேசுவதற்கு மோடிக்கு அருக தையே இல்லை. மோடி பேசும் போது தொழில்துறை சிறப்பாக உள்ளது, பஞ்சாலைகள் சிறப்பாக செயல்படுகிறது என்று சொல் கிறார். ஆனால் அரசாங்கத்தால் நடத்தப்படுகிற மில்களே மூடிக் கிடக்கிறது. இந்தியாவில் என்.டி.சி ஆலைகள் 23 உள்ளன. தமிழகத் தில் மட்டும் 7 உள்ளது. குறிப்பாக கோவையில் மட்டும் ஐந்து உள் ளது. இவை அனைத்தும் 2020 ல் இருந்து மூடப்பட்டு கிடக்கிறது. இயற்கை சீற்றத்தால் சென்னை உட்பட நான்கு மாவட்டங்கள், அதே போல தென் மாவட்டங்களில், ஐந்து மாவட்டங்கள் என மொத்தம் ஒன்பது மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்களின் வாழ்க் கையே நிலைகுழைந்து போனது. ஆனால் இதுவரை பாதிக்கப் பட்ட மக்களுக்கு, ஒரு பைசா கூட ஒன்றிய அரசு வழங்கப்படவில்லை. தமிழகத்திற்கு எந்த உதவியும் செய்யாமல் அவர்கள் பாதிக் கப்பட்டு நிற்கதியாக நிற்கிற பொழுது கூட, உதவி செய்யாத பிர தமருக்கு தமிழகத்தில் ஓட்டு கேட்க என்ன உரிமை இருக்கிறது. தமி ழகத்திற்கு வருவதற்கு மோடிக்கு தார்மீக ரீதியான உரிமை இல்லை. கேரளாவில் இந்திய கூட்டணி தான் போட்டியிடுகிறது மூன்றாவது அணி இல்லை. ராகுல் காந்தி வெற்றி பெற்றாலும் ஆணி ராஜா வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி இந்தியா கூட்டணியின் வெற்றி தான்,” என முத்தரசன் தெரிவித் தார்.