நாமக்கல், பிப்.14- மோடியின் முகமூடி அணிந்து வடை சுடும் போராட்டம் நாமக்கல் மாவட்டத் தின் அனைத்து பகுதிகளிலும் நடத்தப் படும் என மேற்கு மாவட்ட திமுக செயற் குழுகூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில், செயற்குழு கூட்டம் திருச்செங் கோடு பரமத்தி சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் நடன சபாபதி தலை மையில் நடைபெற்றது. இதில் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் மண்டல நகர மைப்புக்குழு உறுப்பினர் மதுரா செந் தில் தீர்மானங்களை கூறுகையில், பிப்.16 ஆம் தேதியன்று, 10 ஆண்டு களில் பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகள், ஒன்றிய அரசிடம் மாநில அரசின் உரிமைகளை அடகு வைத்த அதிமுக துரோகங்கள் ஆகிய வற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், உரிமைகளை மீட்க ஸ்டா லின் குரல் என்ற பரப்புரை கூட்டம் நாமக் கல்லில் நடக்க உள்ளது. இதில், பத்து ஆண்டுகளாக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை எதையும் நிறைவேற்றா மல் வெற்றி அறிவிப்புகளாக வெறும் வாயால் வடை சுடும் மோடி அரசின் அவலங்களை மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் மோடியின் முகமூடி அணிந்து வடை சுடும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார். இக் கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் இருந்து திமுக முன்னணி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.