சேலம், ஜூலை 29- தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையை நவீனப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராம ரிப்பு நிறுவன தொழிலாளர் சங்க சேலம் மாவட்ட பேரவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டிகள் பரா மரிப்பு நிறுவன தொழிலாளர் சங்கப் பேரவை அஸ்தம்பட்டியில் பணிமனை அலுவல கத்தில் மாவட்டத் தலைவர் குழந்தைவேலு தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு நலத்திட்டங் களை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவிடும் அத்தியாவசியமான பணிகளை செய்யும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையை நவீனப்படுத்த வேண்டும். சமூக நீதி அடிப்படையில், காலியாக உள்ள துவக்க நிலை தொழில்நுட்ப பணியாளர்களை நிரப் பிட வேண்டும். அரசுத்துறை ஓட்டுநர்களை அலைக்கழிப்பதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. இதையடுத்து, மாநிலத் துணைத்தலை வர் முருகப்பெருமாள், ஓய்வூதியர் சங்கம் மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், சுகா தாரப் போக்குவரத்துத்துறை சீனிவாசன், சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவன தொழிலாளர் சங்கத்தின் தலைவராக சுரேஷ், செயலாளராக குழந் தைவேலு, பொருளாளராக குமரன் ஆகி யோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் சங்கத் தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.