districts

img

அரசு பணியாளர் தேர்வாளர்களுக்கு மாதிரித் தேர்வு

திருப்பூர், ஆக.28- அரசு பணியாளர் தேர்வாளர்களுக்கு மாதிரித் தேர்வு திருப்பூரில் புதனன்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் தொகுதி 2, தொகுதி 2 ஏ  தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. தொகுதி 2 பதவிக்கு 507 காலியிடங்களும், தொகுதி 2 ஏ பணிக்கு 1820 பணியிடங்களும் என மொத்தம் 2327 காலிப்பணியிடங்களை அறிவித் துள்ளது. இந்த தேர்வு வரும் செப்.14 ஆம் தேதி நடைபெறுகிறது. தொகுதி 2 மற்றும் தொகுதி 2 ஏ தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவ லர் மற்றும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர், உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட காலி பணி யிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தின் பயிற்சி மையத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி, வேறு மாவட் டங்களை சேர்ந்த தேர்வர்களும் மாவட்ட வேலைவாய்ப்பு முகாமில் தொடர்ந்து நடந்து வரும் போட்டித்தேர்வு பயிற்சி வகுப்பில் பங்கேற்று வருகின்றனர். தற் போது இந்த பயிற்சி வகுப்பில் 124 மாணவ, மாணவிகள் படித்து வருகின் றனர். இவர்கள் தவிர திருப்பூர் ஆட்சியர் அலுவலகம், பழைய பேருந்து நிலை யம் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற் பனைக் கூடத்தில் 100-க்கும் மேற்பட் டோர் படித்து வருகின்றனர். தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், தேர்வர்க ளுக்கு தொடர் பயிற்சி அளிக்கும் வகை யில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவ லகத்தில் தொடர்ந்து 3 மணி நேர மாதிரி தேர்வுகள் வாரந்தோறும் நடத்தப்படு கின்றன. அதன்படி புதனன்று நடந்த மாதிரித் தேர்வில் தேர்வர்கள் பங்கேற்று தேர்வு  எழுதினர். இதனை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் கண் காணித்தார். இதுதொடர்பாக அவர் கூறு கையில், தேர்வர்களுக்கு தொடர்  பயிற்சி தான் முக்கியம். அவர்களுக்கு இதுவரை 4 மாதிரித் தேர்வுகள் முடித் துள்ளோம். இன்றைக்கு (புதன்கிழமை) 5 ஆவது தேர்வு நடைபெற்றது. ஆட் சியர் தா.கிறிஸ்துராஜ் தொடர்ந்து கண் காணித்து, பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார். பிரதான தேர்வுக்கு  முன்பாக மேலும் 2 தேர்வுகள் நடத்தப் பட உள்ளது. தேர்வர்களின் பயத்தை போக்கிவிட்டாலே, அவர்கள் எளிதில் வெற்றி பெறுவார்கள். ஆகவே அந்த  பயத்தை போக்கவும், தேர்வு தொடர் பான நேரத்தை கையாளவும் இந்த மாதிரி தேர்வுகள் அவர்களுக்கு மனதளவில் பக்கபலமாக இருக்கும், என்றார்.