districts

img

வெளிநாட்டில் வேலை செய்து வந்த கணவரை காணவில்லை என புகார்

சேலம், மார்ச் 23- வெளிநாட்டில் வேலை செய்து வந்த தனது கண வரை காணவில்லை எனக் கூறி சேலம் ஆட்சியர் அலுவ லகத்தில் புகாரளித்துள்ளார். சேலம் மாவட்டம், சூரமங் கலம் அருகே உள்ள முல்லை நகரைச் சேர்ந்தவர் நித்யா  (31). இவரது கணவர் கார்த்திக் ரங்கநாதன். இவர்களுக்கு சாயிஷா, சாய்மித்ரன் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ள னர். இந்நிலையில், கார்த்திக் ரங்கநாதன் சவுதி அரேபியா, ரியாத் நாட்டில் உள்ள சபாரி கம்பெனியில் மேற்பார்வை பொறியாளராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த மூன்று  மாதத்திற்கு முன்பு வேலைக்குச் சென்ற தனது கணவரிடம் அவ்வப்போது தொலைபேசியில் தகவல்களை பரிமாறி உள்ளார். கடந்த மார்ச் 20 தேதி இரவில் இருந்து எனது கண வரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து கணவர்  வேலை பார்க்கும் கம்பெனி ஊழியர்களிடம் கேட்டபோது, மார்ச் 20 தேதி இரவு வேலையை முடித்துவிட்டு, டாக்ஸி யில் சென்றதாக தெரிவித்துள்ளனர். அவரது உடன் தங்கியி ருந்த நண்பரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இதுவரை யில் தங்கியிருக்கும் இடத்திற்கு வரவில்லை என கூறியுள் ளார். இதனால் அதிர்ச்சிடைந்த நித்யா. தன் கணவருக்கு என்ன  நடந்தது என்று தெரியாமல் தனது குழந்தைகளுடன் தவித்துக்  கொண்டிருப்பதாகவும், தமிழக அரசும், இந்திய அரசும், சவுதி  அரேபியாவில் காணாமல் போன என் கணவரை கண்டுபி டித்து தர வேண்டும், எனக்கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தார்.