மேட்டுப்பாளையம், மே 11- சிறுமுகை வனப்பகுதியில் ஆண் காட்டுயானை யொன்று உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத் துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பவானிசாகர் அணையின் நீர்தேக்கப் பகுதியான பெத்திகுட்டை வரப் பள்ளம் என்னுமிடத்தில் புதனன்று வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஆண் யானை யொன்று இறந்து கிடப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து வனத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டதையடுத்து, வனத்துறை மருத்துவர் அடங்கிய குழு வினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்ட ஆய்வில் இறந்த யானைக்கு 11 வயதிருக்க லாம் என்றும், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக போதுமான அளவு உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ளாத நிலையில் யானை இறந்திருக்கலாம் என் றும் இக்குழுவினர் கண்டறிந்தனர். எந்த வகையிலான நோய் பாதிப்பில் யானை இறந்தது என்பதை கண்டறியும் வகையில், அதன் உடலை உடற்கூறு ஆய்வு நடத்த மருத்துவ குழுவினர் முயன்றபோது, யானை யின் உடல் அருகே பிற யானைக்கூட்டங்களின் நடமாட்டம் அதிகரிக்க துவங்கியதால் வேறு வழியின்றி வனத்துறை குழுவினர் பின்வாங்கினர். தற்போது இறந்து கிடக்கும் யானை கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக அதே பகுதியில் சோர்வுடன் சுற்றி வந்துள்ளது.இதனையறிந்த வனத்துறையினர் இதன் நடமாட்டத்தை கண்காணித்து வந்த போதிலும் அருகே சென்றால் விரட்டி வந்த கார ணத்தினால் வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சூழலில் யானை திடீரென இறந்தது வனத்துறையி னரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோவை வனக்கோட் டத்தில் யானைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு தொடர்ச்சியாக மரணித்து வருகின்றன என்பதை தகுத்த வல்லுநர்கள் குழு மூலம் ஆய்வு நடத்த வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.