districts

img

கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

சேலம், அக்.2- ரூ.2.35 கோடி மதிப்பீட் டில் நவீனப்படுத்தப்பட்ட சேலம் கோ – ஆப்டெக்ஸ்  தங்கம் பட்டு விற்பனை நிலை யத்தை அமைச்சர்கள் ஆர்.காந்தி, கே.என்.நேரு ஆகி யோர் திங்களன்று திறந்து வைத்தனர். நவீனப்படுத்தப்பட்ட சேலம் கோ–ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தினைத் திங்களன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். இதையடுத்து கைத்தறி மற்றும் துணிநூல்  துறை அமைச்சர் ஆர்.காந்தி முதல் விற்பனை யைத் தொடங்கி வைத்தார். இதன்பின் அமைச்சர் ஆர்.காந்தி செய்தி யாளர்களிடம் பேசுகையில், நட்டத்தில் இயங்கி வந்த கோ-ஆப் டெக்ஸ் நிறுவ னத்தை திமுக அரசு பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே சுமார் ரூ.7 கோடி நட்டத்தை ஈடு கட்டி ரூ.9.49 கோடி லாபத்தில் இயங்கி டும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவ னத்தைப் பொறுத்த வரையில். தமிழ்நாட்டில் மட்டும் 105 கடைகள் உள்ளன. மேலும், இதர மாநிலங்களில் 49 கடைகள் உள்ளன. கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகையில் 500 முதல் 1,000 புதிய ரகங்கள் மற்றும் விற்ப னைக்காக வைக்கப்பட்டுள்ளன. தோடர் உள் ளிட்ட மலைவாழ் மக்கள், தாங்கள் விரும்பி அணியக்கூடிய எம்ராய்டிங் செய்யப்பட்ட துணி வகைகளை கோ -ஆப்டெக்ஸ் மூலம்  விற்பனை செய்ய வேண்டுமென கோரிக்கை  வைத்தனர். அதனையேற்று உதகையில் இதற்கான கூட்டுறவுச் சங்கம் ஏற்படுத்தப் பட்டு, எம்ராய்டிங் ரகங்களுக்குத் தேவை யான மூலப்பொருட்களை அவர்களுக்கு வழங்கி மலைவாழ் மக்கள் விரும்பும் எம்ராய் டிங் துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, தற்போது அனைத்து கோ-ஆப்டெக்ஸ் விற் பனை நிலையங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன, என்றார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் ஆ. ராமச்சந்திரன், கோஆப் டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் இரா.ஆனந்தகுமார், கைத்தறி துறை ஆணையர் கே.விவேகானந்தன், மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம், எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் ரா.ராஜேந்திரன், ரா.அருள், மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.