districts

img

தாராபுரம் மெடிக்கல் சென்டர் மருத்துவனை அமைச்சர்கள் திறந்து வைப்பு

தாராபுரம், ஜூலை 23 – தாராபுரம் மெடிக்கல் சென்டர் மருத்துவ மனை மற்றும் மருந்தகத்தை அமைச்சர்கள் ஞாயிறன்று திறந்து வைத்தனர். தாராபுரம், எல்லப்பாளையம் ஆறுமுகம்  அறக்கட்டளை மற்றும் அனிதா டெக்ஸ்காட்  நிறுவனம் சார்பில் தாராபுரம் மெடிக்கல் சென்டர் மருத்துவமனை (டிஎம்சிஎச்) மற்றும்  மருந்தகம் திறப்புவிழா நடைபெற்றது. மெடிக்கல் சென்டர் கட்டடத்தை தமிழ் வளர்ச்சிதுறை மற்றும் செய்தித்துறை அமைச் சர் மு.பெ.சாமிநாதனும், மருந்தகத்தை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல் விழி செல்வராஜூம், மருத்துவமனையை கோவை கே.ஜி.மருத்துவமனை சேர்மன்  டாக்டர் பக்தவச்சலமும், பரிசோதனை கூடத்தை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜூம்,  பல்சிகிச்சை பிரிவை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சாமிநாதனும், நடமாடும் மருத்துவப்பிரிவை நகராட்சிகளின் மண்டல இயக்குநர் டாக்டர் இளங்கோவனும், ஸ்கேன்  சென்டரை கோபி அபி எஸ்.கே.மருத்துவ மனை சேர்மன் டாக்டர் செந்தில்நாதனும், எக்ஸ்ரே பிரிவை பொள்ளாச்சி டாக்டர் மகேந் திரனும், ஆம்புலன்ஸ் சேவை பிரிவை திருப்பூர் மாநகராட்சி 4ஆம்  மண்டல தலைவர்  பத்மநாபனும் திறந்து வைத்தனர்.  இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும்  திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார்,  சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துரை வழங் கினர்.  இதுகுறித்து, தாராபுரம் மெடிக்கல் சென்டர் மருத்துவமனை சேர்மன் அனிதா சந்திரசேகரன் தெரிவிக்கையில், தாராபுரம் பகுதி மக்களுக்கு குறைந்த கட்ட ணத்தில் அனைத்து வசதிகளும் செய்யப் பட்டுள்ளன. இம்மருத்துவமனை 24 மணி நேரம் செயல்படும். மருந்துகளுக்கு 15 சத விகித தள்ளுபடி வழங்கப்படுகிறது என தெரி வித்தார். இவர் தாராபுரம், பொன்னிவாடியில் உள்ள அரசு பள்ளிக்கு ரூ.1 கோடி மதிப்பில்  கட்டடங்களை கட்டி தந்துள்ளது குறிப்பிடத் தக்கது.