கோவை, அக்.30- முத்தமிழறிஞர் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா, கள ஆய்வு உள் ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் நவம்பர் 5 ஆம்தேதி கோவை வருகிறார். இந்நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் அமைச்சர் செந்தில்பாலாஜி புதனன்று ஆய்வு செய்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 மற்றும் 6 ஆம் தேதிக ளில் கோவையில் கள ஆய்வு மேற்கொள்கிறார். அப்போது, கோவை காந்திபுரம் மத்திய சிறை மைதானத்தில், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், முத்தமிழறிஞர் கலைஞர் நூலகம் மற் றும் அறிவியல் மையக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், அரசு திட்டங்கள் ஆய்வு செய்வதுடன், கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அதற்கான ஏற்பாடு கள் நடைபெற்றுக் கொண்டுள்ள நிலையில், புதனன்று தமி ழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, நடைபெற உள்ள பிவிஜி மஹால் மற்றும் காந்திபுரம் மத்திய சிறை மைதானத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொண் டார். இந்த ஆய்வின்போது, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந் திகுமார் பாடி, மாநகர மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, கோவை எம்பி., கணபதி ராஜ்குமார், துணைமேயர் வெற்றிச்செல்வன், மாவட்டச் செயலாளர்கள் நா.கார்த்திக், தொஅ.ரவி, தளபதி முருகே சன், முன்னாள் எம்பி நாகராஜ் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.