நாமக்கல், ஜூன் 18- நாமக்கல் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற 1,780 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.41.58 லட்சம் மதிப்பீட்டில், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பரிசு மற் றும் பாராட்டு சான்றிதழ்களை வழங் கினார். நாமக்கல் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற 1,780 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நாமக்கல் அரசு மருத் துவக்கல்லூரி கலையரங்கில் ஞாயி றன்று நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்கு மாவட்ட ஆட்சியர் ச.உமா, தலைமை வகித்தார். ரூ.41.58 லட்சம் மதிப்பீட்டில் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி னார். அப்போது அவர் பேசுகையில், விளையாட்டு துறைக்கு முக்கியத்து வம் வழங்கி, வீரர்களை ஊக்குவிக் கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் விளையாட்டு மற் றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி களை மாவட்ட அளவில் நடத்தியுள் ளார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கி றேன். மேலும், விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து விளையாடி தேசிய அள வில், உலக அளவில் பல்வேறு போட் டிகளில் வெற்றி பெற வேண்டும். நாமக்கல் மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாக விளங்கி வரு கிறது. அதேபோன்று விளையாட்டு துறையிலும் நாமக்கல் மாவட்டம் மாநில அளவில், தேசிய அளவில் சிறந்து விளங்கிடும் வகையில் வெற்றி பெற்று நாமக்கல் மாவட் டத்திற்கு பெருமை தேடி தர வேண் டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், நாமக் கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராம லிங்கம், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி, முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ் வரி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.கோகிலா ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.