districts

img

மேட்டுப்பாளையத்தில் 4ஆவது குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தில் அமைச்சர் நேரில் ஆய்வு

திருப்பூர், அக். 7 - கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்  திருப்பூர் மாந கராட்சியின் நான்காம் கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையத் தின் பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சனியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலை மையில், திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், மாநக ராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனர் ஆகியோர்  முன்னிலையில்தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். ரூ.1120.57 கோடி மதிப்பீட்டில் திருப்பூர் நான்காவது குடிநீர்  திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நீரேற்று  நிலையம் பவானி ஆற்றில் இருந்து நீர் எடுக்கும் வகையில்  மேட்டுப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீரேற்று நிலையத்தைப் பார்வையிட்டு அமைச்சர் மற்றும்  மேயர் ஆய்வு செய்தனர். அப்போது பவானி ஆற்றில் நீர்  உறிஞ்சும் பகுதி, மோட்டார் பம்ப் அறை மற்றும் சுத்தி கரிப்பு பகுதி, கட்டுப்பாட்டு அறை ஆகிய இடங்களை இவர்கள் பார்வையிட்டு விபரம் கேட்டறிந்தனர். இந்த ஆய்வின்போது, திருப்பூர் மாநகராட்சி துணை  மேயர் ஆர்.பாலசுப்பரமணியன், மாநகராட்சி செயற்பொறி யாளர் கண்ணன், இளநிலைப் பொறியாளர் கோவிந்த பிரபா கர், நீர்பாசனத் துறை செயற்பொறியாளர் அருள் அழகன்,  உதவி செயற்பொறியாளர் சுப்பரமணி, உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண் டனர்.