திருப்பூர், ஜூன் 11- திருப்பூர் மாநகராட்சி, தென்னம் பாளையம் காய்கறி மார்க்கெட்டில், “என் குப்பை, என் பொறுப்பு” என்ற உறுதிமொழியுடன் தீவிர தூய்மைப் பணிகளை மாநில செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சனியன்று துவக்கி வைத்தார். தமிழகத்தில் நகரங்களின் தூய் மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மைப் பணிகளை தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகு தியாக திருப்பூர் மாநகராட்சியில் தீவிர தூய்மைப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அதன் படி தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் தூய்மை பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் உறுதிமொழி வாசித்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் க.செல்வராஜ், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். தூய்மை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர், துப்புரவு பணி யாளர்களுடன் இணைந்து அவரும் மார்க்கெட்டில் குப்பைகளைக் கூட்டி சுத்தம் செய்தார். அவரை தொடர்ந்து அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் தூய்மை பணிகளில் ஈடுபட்டனர். சுமார் 200 க்கும் மேற் பட்ட தூய்மை பணியாளர்கள் தென் னம்பாளையம் மார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்ட னர்.