districts

img

அமைச்சர் முத்துசாமி வாக்கு சேகரிப்பு

ஈரோடு, ஏப். 4- ஈரோடு மாநகரப் பகுதியில் திமுக வேட்பாளர் கே.இ. பிரகாஷிற்கு ஆதரவாக அமைச்சர் சு.முத்துசாமி வாக்கு சேக ரித்தார். ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி யின் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ்  ஆதரித்து தமிழ்நாடு  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர்  சு.முத்துசாமி ஈரோடு மாநகரம் 60 வதுவார்டு வெண்டிபாளை யம், லட்சுமி நகர், குப்பக்காடு, மோளகவுண்டன் பாளை யம், பகுதிகளில் வாக்கு சேகரித்தார். இதில் திமுக நிர்வாகி கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுக்கா செய லாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகி கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ்,  கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ் நகரில் அமைந்துள்ள தர்காவில் வாக்கு சேகரித்தார். இதில் திமுக மாநகரச் செயலா ளர் சுப்பிரமணியம், மண்டல தலைவர்கள் ப.க.பழனிச்சாமி,  குறிஞ்சி என்.தண்டபாணி, இளைஞர் அணி அமைப்பாளர்  திருவாசகம், மாமன்ற உறுப்பினர் கீதாஞ்சலி செந்தில்கு மார், மாவட்டக் கழகச் செயலாளர் மகேஸ்வரன், புனிதன்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.