districts

அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் அமைச்சர் முத்துசாமி வழங்கினார்

ஈரோடு, ஜூலை 28- ஈரோடு மாவட்டத்தில் உள்ள 127 அரசு  மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 13,140 மாணவ, மாணவி யர்களுக்கு ரூ.6.3 கோடி மதிப்பீட்டில் விலை யில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ள தாக வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 1012 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. கூடுதல் ஆட்சியரும், மாவட்ட ஊரக வளர்ச்சி  முகமை திட்ட இயக்குநர் மனிஷ் தலைமை  வகித்தார். மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம்  முன்னிலை வகித்தார். அமைச்சர் சு.முத்து சாமி மாணவ, மாணவியர்களுக்கு விலை யில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது, நமது மாவட்டத்தை சார்ந்த மாணவ, மாணவி யர்கள் பயன்பெறும் வகையில் சிக்கய்ய  நாயக்கர் கல்லூரியில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில் உலகத் தரம் வாய்ந்த உள் விளையாட்டு அரங்கம்  அமைக்கப்பட உள்ளது. பொது அறிவினை  வளர்த்துக் கொள்வதற்காக சென்னை, மதுரை போன்ற இடங்களில் அமைந்துள் ளதை போல் மிகப் பெரிய அளவிலான நூலகம் அமைக்கப்படும். போட்டித் தேர்வு களை எதிர் கொள்வதற்காக பயிற்சி மையங் களும் அமைப்பதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்படும். மேலும், நமது மாவட்டத்தில் உள்ள  127 அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 5,550 மாணவர்கள் மற்றும் 7,590 மாணவியர்கள் என மொத்தம்  13,140 எண்ணிக்கையில் ரூ.6 கோடியே 33 லட்சத்து 23 ஆயிரத்து 400 மதிப்பிலான மிதி வண்டிகள் வழங்கப்பட உள்ளன என தெரி வித்தார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், முதன்மை கல்வி அலுவலர் குழந்தைராஜன், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சி  குழு துணைத் தலைவர் கஸ்தூரி, பள்ளி தலை மையாசிரியர் சுகந்தி உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.