கோவை, ஆக.11- கோவையின் அடை யாளங்களில் ஒன்றான மணிக்கூண்டு புதுப்பிக்கப் பட்டுள்ளது. இதனை தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துச்சாமி திறந்து வைத் தார். கோவையின் அடை யாளமாக மணிக்கூண்டு திகழ்கிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த மணிக்கூண்டு, ராஜவீதி, பெரிய கடை வீதி சந்திப்பில் அமைந்துள்ளது. 1928 ஆம் ஆண்டு இந்த மணிக்கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரத் தில் உதிரி பாகங்கள் இங்கிலாந்து பகுதியில் இருந்து கொண்டு வரப்பட் டுள்ளது இதன் சிறப்பாகும். இந் நிலையில், கிரடாய் அமைப்பு சார்பில் இந்த பழமையான மணிக்கூண்டு புதுப் பிக்கப்பட்டது. இதை தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துச்சாமி திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து, அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறு கையில், இந்த மணிக்கூண்டு 1928 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சிறிது காலம் பராமரிப்பு இன்றி இருந்தது. தற்போது, தனியார் அமைப்பு சார்பில் பராமரிக் கப்பட்டுள்ளது. இதுபோன்று பழைய கட்டிடங்களை புதுப்பித்து வருகின் றோம். இது ஒரு மிகப்பெரிய அடை யாளம். இதுபோன்ற பழமையான கட்டிடங்களை பாதுகாக்க வேண்டும். தமிழக முதல்வர் அவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரு கின்றார். ஒவ்வொரு துறையையும் ஆய்வு செய்து வருவதுடன், அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கண் காணித்து வருகின்றார். கோவைக்கு முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி வரு கின்றார். கோவைக்கு வருகை தர உள்ளார். கோவை மாஸ்டர் பிளான் திட்டத்திற்கு கமிட்டி அமைக்கப்பட் டுள்ளது. இதில் 135 இடங்கள் அடை யாளம் காணப்பட்டுள்ளது. இப்பணி 7 சதவிகிதம் ஏற்கனவே முடிவடைந்தது. தற்போது 19 சதவிகித பணிகள் முடி வடைந்துள்ளது. இதில் 22 சதவிகிதப் பணிகள் விரைவில் முடிவடையும் என்றார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், துணை ஆணையாளர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.