தருமபுரி, மார்ச் 23- தருமபுரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளருக்கு அமோக வெற் றியை பெற்றுத்தர வேண்டும் என வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல் வம் அறைகூவல் விடுத்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோட் டிலுள்ள தனியார் மண்டபத்தில் தரும புரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி அறிமுக கூட்டம் நடைபெற்றது. வேளாண் மற்றும் உழ வர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் தலைமை வகித் தார். திமுக தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்ச ருமான பி.பழனியப்பன் வரவேற் றார். அப்போது வேட்பாளரை அறிமு கம் செய்து வைத்து அமைச்சர் பன் னீர்செல்வம் பேசுகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப் பேற்று 3 வருடத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, இலவச பேருந்து வசதி, கல் லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட் டம், மக்களை தேடி மருத்துவம் உள் ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகி றார். மேலும், தருமபுரி மாவட்ட மக்க ளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஜப்பான் நாட்டு உதவியுடன் ஒகே னக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல் படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தூள்செட்டிஏரி, எண்ணேகொல்புதூர், புலிக்கரை இடதுபுற கால்வாய் திட்டம் உள் ளிட்ட நீர்வழி கால்வாய் திட்டப்பணி கள் விரைவாக நடைபெற்று வரு கிறது. எனவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் ஆ. மணிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும், என்றார். இக்கூட்டத்தில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் அன்பழகன், எம்.வீ. டி.கோபால், முனியப்பன், இல.கிருஷ் ணன், அடிலம் அன்பழகன், பேரூ ராட்சித் தலைவர்கள் பி.கே.முரளி, வெங்கடேசன், மனோகரன், நகரச் செயலாளர் சீனிவாசன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தீர்த்தராமன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ. குமார், சிபிஐ மாவட்டச் செயலாளர் கலைசெல்வம், விசிக மாவட்டச் செய லாளர் கருப்பண்ணன், மதிமுக மாவட் டச் செயலாளர் ராமதாஸ், கொமதேக ஆனந்தகுமார், மமக மாவட்டத் தலை வர் சுபேதார், ஆம் ஆத்மி தின்னரசு, மக்கள் நீதி மய்யம் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பிரச்சாரம் செய்ய சிஐடியு முடிவு இதேபோன்று, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, சிஐடியு தருமபுரி மாவட்டக்குழு சார் பில், சிறப்பு பேரவை கூட்டம், மாவட் டச் செயலாளர் பி.ஜீவா தலைமை யில் நடைபெற்றது. சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன் சிறப்புரை யாற்றினார். மாவட்ட துணைத்தலை வர்கள் சி.முரளி, எஸ்.சண்முகம், சி. அங்கம்மாள், மாவட்ட இணைச்செய லாளர்கள் ஆணஸ்ட்ராஜ், கண்ணதா சன், கவிதா ஆகியோர் பேசினர். இக் கூட்டத்தில், தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார் பில் திமுக வேட்பாளர் ஆ.மணி போட் டியிடுகிறார். இவருக்கு வாக்கு சேக ரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வதென கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டது.