districts

img

இடுவாயில் கால்நடை மருத்துவமனை: அமைச்சர் திறந்து வைத்தார்

திருப்பூர், நவ.10 - திருப்பூர் ஒன்றியம் இடு வாய் ஊராட்சியில் அண்ணா மலை கார்டன் பகுதியில் தமி ழக அரசின் சார்பாக ரூ.40 லட் சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள  கால்நடை மருத்துவமனை திறப்பு விழா வியாழனன்று நடைபெற்றது. தமிழக அரசின் செய்தி மற்றும் தமிழ்  வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மருத்துவமனையை திறந்து வைத்தார். இந் நிகழ்வில், ஊரக உள்ளாட்சி துறை திட்ட இயக் குனர் லட்சுமணன், இடுவாய் ஊராட்சி மன்ற  தலைவர் கே.கணேசன், மங்களம் ஊராட்சித்  தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, இடுவாய் ஊராட்சி துணைத்தலைவர் பரமசிவம், திமுக  திருப்பூர் ஒன்றிய செயலாளரும், முத லிபாளையம் ஊராட்சியின் முன்னாள் தலை வருமான விஸ்வலிங்கசாமி, கால்நடைத் துறை அதிகாரிகளும், இதர துறை அரசு அதி காரிகளும் ஊராட்சி பொதுமக்களும் திர ளாக கலந்து கொண்டனர்.