districts

img

பச்சை தேயிலைக்கு குறைந்த பட்ச விலை

உதகை, செப்.8- ஒன்றிய அரசு, பச்சை தேயி லைக்கு குறைந்தபட்ச விலை நிர் ணயம் செய்யக்கோரி நீலகிரியில் 8ஆவது நாளாக வெள்ளியன்று உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது. நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட் சத்து 33 ஆயிரம் ஏக்கர் பரப்பள வில் தேயிலை சாகுபடி செய்யப்படு கிறது. இந்த தேயிலை விவசா யத்தை சுமார் 65 ஆயிரம் பேர் ஈடு படுகின்றனர். மேலும், நேரடியா கவும், மறைமுகமாகவும் சுமார் 4  லட்சம் பேர் பயனடைந்து வரு கின்றனர். தென்னிந்தியாவில் நீல கிரி தேயிலை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆனால் தேயி லைக்கு கடந்த 40 வருடங்களாக சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக் கப்பட்டு வருகின்றனர்.  இதைத்தொடர்ந்து பச்சை  தேயி லைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி பிரதமர், ஒன்றிய வர்த்தகத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல மைச்சருக்கு ஆகியோருக்கு தபால் மூலம் மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.  

மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் மனு கொடுக்கும் நூதன போராட்டமும் நடந்தது. ஆனாலும் பச்சை தேயிலை பிரச்சனைக்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் அதிருப்தி அடைந்த விவசாய சங்கத்தினர் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி செப்.1ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் மாவட்டத்தில் மூன்று இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இதில், பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின் றனர். அதன்படி, வெள்ளியன்று நீலகிரி மாவட்டத்தில் தங்காடு, எப்ப நாடு, கோத்தகிரி ஆகிய இடங் களில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.  தங்காடு பகுதியில் நடந்த போராட்டத்திற்கு, நாக்கு பட்டா நல  சங்கச் செயலாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். போராட்டம் நடைபெறும் இடத்தில் தேயி லையை பொதுமக்கள் கொட்டி வைத்திருந்தனர். மேலும், பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்  செய்யும் வரை 400 கிராமங்களில்  இருந்து 65 ஆயிரம் விவசாயி களுடன் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தேயிலை விவ சாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தேயிலை வாரியம் அழைப்பு  விடுத்துள்ளது. ஆனால், இன்று (சனிக்கிழமை) போராட்டம் நடை பெறும் என விவசாயிகள் தெரிவித் தனர்.