districts

img

கோவையில் மினி மாரத்தான் போட்டி

கோவை, ஜன. 28- போதைப்பொருளுக்கு எதிராகவும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங் களை தடுக்க வலியுறுத்தியும் கோவையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. கோவை மாவட்டம், கணபதி அடுத்த  மணியகாரம்பாளையம் பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு குறித்தும், பெண் குழந் தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சி.எம்.எஸ். மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.  இந்த மாரத்தான் போட்டியை தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கொடி யசைத்து துவக்கி வைத்து, அவரும் கலந்து  கொண்டு ஓடினார். இரண்டு கிலோமீட்டர், ஐந்து கிலோமீட்டர், பத்து கிலோமீட்டர் என  மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த ஓட்ட பந்தயத்தில், பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சைலேந்திரபாபு, தமிழகத்தில் கஞ்சா  வேட்டை என்ற ஆபரேஷன் திட்டத்தை துவங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்ற வாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய் தோம். இதில் சுமார்  2ஆயிரத்திற்கும் மேற் பட்டோர்களின் சொத்துக்கள் முடக்கப்பட் டன. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் கிரா மங்களில் குற்றங்கள் கணிசமாக குறைந் துள்ளது.  இதே போன்று குழந்தைகளுக்கு எதி ரான குற்றங்களை தடுக்க அனைத்து பள்ளி  மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவி யர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகின்றது. மேலும் இதற்காக கோவை யில் இது மாதிரியான விழிப்புணர்வு மாரத் தான் ஓட்ட பந்தயம் நடத்துவது, அனைவருக் கும் விழிப்புணர்வு ஏற்படும் என தெரிவித்தார்.  குழந்தைகள் குறைந்தபட்சம் 5 கிலோமீட்டர்  தூரம் ஓட வேண்டும். அதற்கு இது மாதிரி யான போட்டிகளை அனைத்து பள்ளிக ளும் நடத்த முன் வர வேண்டும் என தெரிவித் தார்.