நாமக்கல், மார்ச் 22- பால் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தி னர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ.42 என வும், எருமைப் பாலுக்கு ரூ.51 என வும் வழங்க வேண்டும். ஆவின் பாலின் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.3 வீதம் குறைத்ததால், ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய மாநில அரசு ரூ.300 கோடியை ஆவின் ஒன்றி யங்களுக்கு வழங்க வேண்டும். பால் கொள்முதலை 32 லட்சத்தி லிருந்து, ஒரு கோடி லிட்டராக உயர்த்த வேண்டும். கொள்முதல் செய்த பாலுக்கான பாக்கி முழு வதையும் உடனடியாக வழங்க வேண் டும். குழந்தைகள் சத்துணவுத் திட் டத்தில் பால் பவுடர் சேர்த்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். நாமக்கல் ஆவின் நிர்வாக அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.ஆர்.முத்துசாமி தலைமை வகித்தார். இதில், மாநி லத் தலைவர் ஏ.எம்.முனுசாமி, மாவட்ட செயலாளர் சதாசிவம், விவ சாய சங்க மாவட்ட செயலாளர் பி. பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, ராஜா நன்றி கூறினார்.