திருப்பூர், அக். 19 - சமீப காலமாக பால் உற்பத்தி செய்யும் செலவு உயர்ந்துள்ளது. குறிப்பாக கால்நடை களுக்கு வழங்கப்படும் கலப்பு தீவனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் விலையை தினசரியும் உயர்த்தி கொண்டே உள்ளன. 3 மாதத்திற்கு முன்பு கலப்பு தீவனம் சூப்பர் 70 கிலோ மூட்டை ரூ.1480/-க்கு விற்பனை யானது, தற்போது ரூ.1625/-க்கும், கலப்புதீவ னம் பைபாஸ் அதிக பால் கிடைக்க பயன்ப டுத்தும் தீவனம் 70 கிலோ மூட்டை ரூ.1550க்கு விற்பனையானது, தற்போது ரூ.1780 என விலை உயர்ந்துள்ளது. பருத்திக்கொட்டை முதல்தரம் ரூ.1850க்கு விற்றது, ரூ.2250 ஆக வும், கழிவுப்பஞ்சு 1 கிலோ ரூ.18க்கு விற்றது, ரூ.25ஆகவும் உயர்ந்துள்ளது. அதேசமயம் விவசாயிகள் விற்கக்கூடிய வைக்கோல் 20 கிலோ கட்டு ரூ.280 ஆக குறைந்துள் ளது. மக்காசோளத் தட்டு டிராக்டர் லோடு ரூ.4500க்கு விற்றது, ரூ.5000 ஆகி யுள்ளது. சோளத்தட்டு டிராக்டர் லோடு ரூ. 15000லிருந்து ரூ.20000 ஆகியுள்ளது. கால்நடை மருந்துகளின் விலை ரூ. 100க்கு விற்றது ரூ.125ஆக உயர்ந்துள்ளது. கலப்பு இன மாடுகளுக்கு கால்சியம், வைட்ட மின்கள், தாது உப்புகள் என ஊட்டசத்து உணவு வழங்க வேண்டியுள்ளது. இதன் விலைகள் 25 சதவீதம் உயந்துள்ளது. மேலும், கால்நடைகளுக்கு நோய்தாக்கு தல் வந்தால், போதுமான மருந்துகள் இல்லா ததாலும், மடி வீக்கம் உள்ளிட்ட கடுமை யாகவும், விரைவாகவும் தாக்கும் நோய்க ளுக்கு அரசு கால்நடை மருத்துவமனைக ளில் உடனடியாக மருத்துவ சிகிச்சை கிடைப் பதில்லை என்ற நிலையில் தனியார் மருத்து வர்களிடம் சிகிச்சைக்கு செல்வதால் குறைந் தபட்சம் ரூ.2000 துவங்கி பல ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தெருநாய்கள் கூட்டமாகச் சேர்ந்துகொண்டு வேட்டை நாய் களாக மாறி கால்நடைகளை கடித்து கொன்று வருகின்றன. பல நூறு ஆடுகள் மற்றும் கன்று கள் இறந்து போயுள்ளன. நாய்களைக் கட்டுப் படுத்தாமல் உள்ளதால் எப்பொழுது யாரு டைய ஆடு, மாடுகளை நாய்கள் கடிக்கும், என் னவாகும் என அச்சத்தில் கால்நடை வளர்ப் போர் இருந்து வருகின்றனர். வேட்டை நாய்க ளால் கால்நடைகளை இழந்த ஏழை சமானிய விவசாயிகளுக்கு எவ்வித அரசு உதவியும் இதுவரை கிடைக்காமல் நஷ்டம் அடைந்துள் ளனர். பாலுக்கும் விலை கிடைக்காமல் தொடர் நஷ்டத்தில் பால் உற்பத்தியில் ஈடுபடும் விவ சாயிகள் தவித்து வருகின்றனர். இந்நிலை யில் தமிழ்நாடு அரசு மாட்டு பால் லிட்டர் ரூ.45, எருமை பால் ரூ.54 என விலை உயர்த்தி அறிவிக்க வேண்டும். கலப்புத்தீவனம் மானிய விலையில் வழங்க வேண்டும்.
மருத் துவ உதவிகள் முழுமையாக கிடைக்க வேண் டும் என பால் உற்பத்தியாளர்கள் அரசிடம் எதிர்பார்க்கின்றனர். கொள்முதல் விலை உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் இந்த நிலையில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க கோரி திருப்பூர் வீரபாண்டி பிரிவு ஆவின் பால் கொள்முதல் நிலையம் முன்பு வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே.கொளந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில், தனியார் நிறுவனங்கள் ஆவினைக் காட்டிலும் கூடுதல் விலை கொடுப்பதால் ஆவின் பால் கொள்முதல் ஆரம்ப சங்கங் களை மூடுவதை தடுத்து நிறுத்தும் முறை யில், பால் கொள்முதல் விலையை லிட்ட ருக்கு ரூ.10 உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ45, எருமை பாலுக்கு ரூ.54 என அறிவிக்க வேண் டும். மற்ற மாநிலங்களில் ஐஎஸ்ஐ பார்மு லாவை பயன்படுத்தி பாலின் தரத்தை நிர்ண யம் செய்வதுபோல தமிழகத்திலும் அமல்ப டுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.மதுசூ தனன், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.வேலுசாமி ஆகியோர் கோரிக்கை கள் குறித்து பேசினர். ஆர்.சுப்பிரமணியம், எஸ்.தனமணி, ஈஸ்வரி, எஸ்.லோகநாதன், கிருஷ்ணமூர்த்தி, கே.கருப்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.