சேலம், ஆக.3- சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி, சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள தீரன் சின்னமலை நினைவு சின்னத் தில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர், மக்களவை உறுப்பினர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் வியாழ னன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். சுதந்ததிர போராட்ட வீரர் தீரன் சின்ன மலை சூழ்ச்சியின் காரணமாக ஆங்கிலே யர்களால் சிறைபிடிக்கப்பட்டு ஆடி 18ஆம் தேதியன்று சங்ககிரி மலைக்கோட்டையில் தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கிலிடப்பட்ட நினைவு தினத்னையொட்டி மலைக் கோட்டையின் அடிவாரத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவபடத்திற்கும், அதே போல் தமிழ்நாடு அரசு சார்பில் ஈரோடு - பவானி பிரிவு சாலை யில் அமைக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலை நினைவு சின்னத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மலர்வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இதில், மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ், சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ்.கார் மேகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப் பினர் ஆர்.ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர், வருவாய் கோட்டாட்சியர் ந.லோகநாயகி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். ஈரோடு இதேபோல், ஈரோடு மாவட்டம், அரச்சலூர் பேரூராட்சி, ஓடாநிலை, தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் தீரன் சின்ன மலை சிலைக்கு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்து சாமி மாலை அணிவித்து மலர் தூவி மரி யாதை செலுத்தினார். இதில், ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளிட்டோர் பங்கேற் றனர். முன்னதாக, அரசு சார்பில் மரியாதை செலுத்திய அமைச்சர் சு.முத்துசாமி சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலை யின் வாரிசுதாரர்களை கௌரவித்து 123 பயனாளிகளுக்கு ரூ.11.06 லட்சம் மதிப்பீட் டிலான நலத்திட்ட உதவிகளை வழங் கினார். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலு வலர் ச.சந்தோஷினி சந்திரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.