districts

img

சொத்து வரி உயர்வு குறித்து விவாதம்

கோவை, ஏப்.11- கோவை மாநகராட்சியில்  நடை பெற்ற மாமன்ற கூட்டத்தில், சொத்து வரி உயர்வு குறித்த விவாதத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக உறுப்பினர்களிடையே கடும் விவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. இதனால்  கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது. கோவை மாநகராட்சி மாமன்றத்தின் முதல் சாதாரண கூட்டம், டவுன்ஹால் பகுதியில் உள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. மேயர் கல்பனா ஆனந்த குமார் தலைமையில் நடைபெற்ற இந்த  சாதாரண கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, துணை மேயர் வெற்றிச் செல்வன், திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ மற்றும் அதி முக மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாமன்ற கூட் டத்திற்கு வந்த 9 காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள், உயர்ந்து வரும் பெட் ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக் கும் விதமாக சைக்கிளில் வந்து தங்கள்  எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், தொடர்ந்து அதிகரித்து வரும் பெட் ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு முக்கிய காரணமாக உள்ளதாக வும், உடனடியாக எரிபொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதே போல் மாமன்ற கூட்டத்திற்கு வந்த அதிமுக உறுப்பினர்கள் சர்மிளா சந்திரசேகர், பிரபாகரன், ரமேஷ் ஆகி யோர் சொத்து வரி உயர்வை கண்டித்து  கருப்பு உடை அணிந்து மாமன்ற கூட்டத் திற்கு வந்தனர். இதையடுத்து துவங்கிய கூட்டத்தில், சொத்து வரியை குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என திமுக உறுப்பினர்கள் உட்பட அனைவரும் வலியுறுத்தினர். இதைடுத்து மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் குப்பைகளை எடுக்க வரும் லாரிகள் எண்ணிக்கையை அதிகபடுத்த வேண் டும். சேதமடைந்த சாலைகளை சீர மைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அப்போது கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி பேசும் போது, அதிமுக ஆட்சியில் பாதாள சாக்கடை  திட்டம், மற்றும் பூங்கா பராமரிப்பில் பல்வேறு ஊழல் நடந்துள்ளதாகவும், அவற்றை கண்டறிந்து நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய அதி முக உறுப்பினர் பிரபாகரன், மண்டல தலைவர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேச முயன்றார். இதனால் திமுக மாமன்ற உறுப்பினர்கள் எதிர் குரல் எழுப்பியதால் கடும் வாக்குவாதம் ஏற் பட்டது. இதைத்தொடர்ந்து பேசிய மாமன்ற உறுப்பினர்கள் சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார் டுக்கும், ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது, அதே போல் கோவை மாந கராட்சியிலும் வார்டுக்கு ரூ.35 லட்சம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோ பால் சுன்காரா கூறுகையில், கோவை மாநகராட்சி 1997 சட்டப்படி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்ய மட்டுமே சட்ட விதி முறை உள்ளது என தெரிவித்தார். அவ் வாறு வார்டுக்கு குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றால் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றி அதை தமிழக அரசுக்கு அனுப்ப லாம், இது குறித்து அரசு தான் முடிவு எடுக்க முடியும் என தெரிவித்தார்.

திமுக - அதிமுக உறுப்பினர்கள் இடையே கைகலப்பு

இதனிடையே 100 சதவிகித சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக உறுப் பினர்கள் முழக்கங்களை எழுப்பிய தோடு, தீர்மான நகலையும் கிழித்து எறிந்தனர். இதனையடுத்து திமுக உறுப் பினர்கள், அதிமுக உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப் போது திமுக உறுப்பினர் பாபு என்ப வர் பிரபகரனை தள்ளிவிட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. உள்ளாட்சி அமைப்பு களுக்கு தமிழக அரசு நிர்ணயித்த சொத்து வரி உயர்வு குறித்த தீர்மா னத்தை நிறைவேற்ற நடைபெற்ற முதல் மாமன்ற கூட்டம் கடும் விவா தம் மற்றும் கைகலப்போடு நடை பெற்றது.

அதிமுக மாமன்ற உறுப்பினர் சஸ்பெண்ட்

இதனிடையே மாநகராட்சி தீர்மான நகலை அதிமுக மாமன்ற உறுப்பினர் பிர பாகரன் கிழித்தெறிந்ததால், அவரை மேயர் கல்பனா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.