தமிழக அரசு சார்பில் மெகா வேலைவாய்ப்பு முகாம் உதகையில் நடைபெற்றது. இதில், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்று 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஆணையினை வழங்கினார். உடன், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் இருந்தனர்.