சேலம், மார்ச் 30- சேலம் மாவட்டம், பெத்த நாயக்கன்பாளையத்தில் நடை பெற உள்ள திமுக தேர்தல் பிரச் சார கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் வந்தார். இதேபோல ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பா ளரை ஆதரித்து, மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் வெள்ளியன்று பிரச்சாரம் செய்து, சேலம் மாவட்டம், மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார் அதே விடுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கிய நிலையில் இருவரும் நேரில் சந்தித்து உரையாடினர். அதனைத்தொடர்ந்து கமல ஹாசன் தமது எக்ஸ் வலைத்தளத்தில், வரும் நாடா ளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதி களையும் திமுக கூட்டணி கட்சிகள் வெல்லும். ஜூன் 4 ஆம் தேதி புதிய இந்தியாவிற்காகவும், தமிழ்நாடு அடைய இருக் கும் புதிய உயரங்களுக்காகவும், இருவரும் பரஸ்பரம் சந்தித்து வாழ்த்தினோம், என பதிவிட்டுள்ளார்.