districts

போதைப்பொருளாக மாறும் வலி நிவாரண மருந்துகள் எச்சரிக்கும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம்

கோவை, ஏப்.28- வலி நிவாரண மருந்துகளை, இளைஞர் கள் மற்றும் போதை ஆசாமிகள், போதைப் பொருளாக பயன்படுத்தி வருகிறார்கள். இதை ஒன்றிய அரசும், மாநில அரசும் முழு மையாக கட்டுப்படுத்த வேண்டும் தமிழ்நாடு  மருந்து வணிகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கோவை மாவட்ட மருந்து வணிகர் சங்கம்  மற்றும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க  செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவை காந்திபுரம் சத்தி ரோடு ஜி.பி. கிராண்ட் கேலக்ஸி மஹாலில் சனிக்கி ழமை நடந்தது. மாநில தலைவர் கே.மனோ கரன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கே.கே.செல்வன், கோவை மாவட்டத் தலைவர் பி.பி.செல்வம், செயலா ளர் திருநாவுக்கரசு, பொருளாளர் ராமச்சந்தி ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில், புற்றுநோய்க்கான மருந்து உள்ளிட்ட பல்வேறு உயிர் காக்கும் மருந்து கள், பொதுமக்களுக்கு குறைந்த விலை யில் கிடைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒரே மூலக்கூறுகள் அடங்கிய மருந்து பொருட்கள் ஒரே விலை யில் கிடைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மருந்து  பொருட்களும் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக  குறைக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதுபற்றி மாநிலத் தலைவர் மனோகரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘’வலி நிவாரண  மருந்துகளை, இளைஞர்கள் மற்றும் போதை  ஆசாமிகள், போதை பொருளாக பயன்ப டுத்தி வருகிறார்கள். இதை ஒன்றிய அரசும்,  மாநில அரசும் முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். மருத்துவர் ஒப்புகை சீட்டு இல்லா மல், வலி நிவாரண மருந்துகளை விநியோ கம் செய்யக்கூடாது. இதனை இளைஞர்கள் தவறான முறை யில் பயன்படுத்தாமல் இருக்க மாநில அரசு கட்டுப்படுத்த வேண்டும். காலாவதியான மருந்துகளை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.