districts

img

இந்தியாவின் தேவை என்பது, மக்கள் நலன் காக்கும் மருந்து கொள்கை தான்!

பயிற்சி மற்றும் சான்று பெற்ற மருத் துவர் மட்டுமே மருந்துகளை பரிந் துரைக்க முடியும். தானாக எந்த  மருந்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. எனச்சொல்லப்படுகிறது. ஆனால், கடை வீதிக்கு வந்தால் பல மருந்தகங்கள், ஆடித் தள்ளுபடி போல தள்ளுபடி சதவிகிதத்தை அறிவித்து விற்பனை செய்யப்படுகிறது. இதில், பிரதமர் மோடியின் உருவம் தாங்கிய மோடி மருந்தகமும் ஒன்று. கடந்த 2014 ஆம் ஆண்டு ஒன்றியத்தில் ஆளும் பொறுப்பை பாஜக ஏற்றது. 2015 ஜனவரியிலிருந்து புதிய மருந்து கொள்கையை அமுலாக்கியுள்ளது. மருந்து விற்பனையில் போட்டி, பாகுபாடு தொடர் கதையாக உள்ளது. மக்களின் உடல், ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட மருந்துகளின் விற்பனை சூதாட்டம் உயிரை பணயம் வைக் கிறது என்கிற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது.  இதுகுறித்து, மருந்து மற்றும் விற்பனை பிர திநிகள் சங்கத்தின் மாநில தலைவர் சத்திய நாராயணான் கூறுகையில், இந்திய அரசு மக்க ளுக்கு குறைந்த விலையில் உயிர்காக்கும் மருத்துகளை கொடுக்க வேண்டும். இந்த  எண்ணம் அரசாங்கத்திற்கு கொஞ்சம் கூட கிடையாது. மருந்து என்பதை வியாபார பொரு ளாக அரசாங்கம் பார்க்கிறது. பெரிய பன் னாட்டு நிறுவனங்கள், ஏகபோக நிறுவனங்கள், சிறிய நிறுவனங்கள் எல்லாருக்கும் நல்ல லாபம் சம்பாதிப்பதற்கேற்ற வகையில் மருந்து கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.  மருந்துகளின் விலையை நிர்ணயம் செய்வ தில் அரசுக்கு ஒரு கொள்கை உள்ளது. எந்த  பொருளும் வியாபாரத்திற்கு வந்தால் கடைசி யாக நுகர்வோர் பெறும் விற்பனை விலை என் பது தயாரிப்பு செலவு, அப்பொருளின் முழுமை யான விலை, அதற்கான வரி, லாபம் உள் ளிட்டவற்றைக் கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்யப்படும். எல்லா பொருட்களின் விலையும் இப்படித்தான் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால்  மருந்து விலை அவ்வாறு நிர்ணயிக்கப்படுவ தில்லை. குறிப்பிட்ட மருந்தை ஆயிரக்கணக் கான மருந்து கம்பெனிகள் தனது பிராண்ட் பெய ரில் விற்பனைக்கு அனுப்புவார்கள். அவ்வாறு மார்க்கெட்டில் ஆயிரம் கோடிக்கு விற்பனையா னால், இதில் அதிகமாக விற்கும் கம்பெனி களின் விற்பனை சராசரியை விலையாக நிர்ண யித்து மற்ற எல்லா கம்பெனிகளும் விற்கலாம் என்பதே அரசின் கொள்கையாக உள்ளது. 

கார்ப்பரேட் நலன்

விலை அதிகமாக நிர்ணயித்துள்ள நிறுவ னம் அவர்களின் சக்திமிக்க மார்க்கெட்டிங் மூலம் மருத்துவர்களிடம் பேசி தங்களுடைய மருந்து தான் வீரியமான மருந்து என அதனை பரிந்துரைக்குமாறு ஊக்குவிக்கின்றனர். இதன் மூலமாக விலை அதிகமுள்ள மருந்துகளே  அதிகமாக விற்பனையாகிறது. இதனை ஒன்றிய அரசு தனக்குச் சாதமாக்கிக் கொண்டு குறிப் பிட்ட சதவிகிதத்திற்கு மேல் விற்கும் மருந்து களின் சராசரி விலையை அந்த ரக மருந்து களுக்கான விலையாக நிர்ணயம் செய்யலாம் என்பதை அரசாங்கம் கொள்கையாக வைத் துள்ளது.  கட்டுப்பாடற்ற விலை நிர்ணயம் ஒவ்வொரு ஆண்டும் மருந்து விலையை 10  விழுக்காடு உயர்த்திக் கொண்டே இருக்கலாம் என்பதும் ஒன்றிய அரசின் மருந்து கொள்கை. ஒரு மருந்தின் தயாரிப்பு விலை ரூ.10 என்றால் அந்த மருந்தை ஒரு கம்பெனி ரூ.80க்கும், மற் றொரு கம்பெனி ரூ.50க்கும், வேறொரு நிறு வனம் ரூ.40க்கும் விற்கிறது. இவ்வளவு வித்தியா சத்தை அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது.  மருந்து விலைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க  வேண்டும். இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அப்பொழுது மருந்து விலை  குறையும்.

ஜிஎஸ்டி

அரசுக்கு வரி மூலம் வருமானம் வருகிறது. ஒன்றிய ஜிஎஸ்டி மூலம் வருமானம் பெறுகிறது. இதில் மாநிலத்திற்கும் பங்கு உண்டு. ஆனால் ஒன்றிய அரசு பல பொருட்களுக்கு வரிகளை  நிர்ணயம் செய்கிறது. நடைமுறைக்கு வந் துள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூடி பல பொருட்க ளுக்கு வரிகளைக் குறைத்துள்ளனர். ஆனால் மக்கள் நோய் தீர்க்கக் கூடிய மருந்திற்கு 12 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதனை அறவே நீக்கினால் விலை மேலும் குறையும். ஏனெனில் சாதாரணமாக 40 வயதி லிருந்து சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட  வியாதிகள் வருகிறது. ஒரு மருந்து, 2 மருந்து  சாப்பிட்டவர் நாளாக நாளாக 4 மருந்து சாப்பிட  வேண்டியவர்கள் ஆகின்றனர். அப்பொழுது தான் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக் கும். இவ்வாறு 4,5 கூட்டு மருந்துகள் சாப்பிடும் போது அவரது மாத வருமானத்தில் ஒரு  குறிப்பிட்ட பகுதியை நோய்க்காக செலவழிக்க வேண்டியுள்ளது. அரசாங்கம் அவருக்கு வரி இல்லாமல் மருந்து கிடைத்தால் மிகவும் பய னுள்ளதாக இருக்கும். ஏனெனில் இன்றைய நிலையில் பணி ஓய்விற்குப் பிறகு மருந்து வாங் குவது என்பது மிகப் பெரிய சாவலாகும். 

சட்டம் தேவை

கோட்பாடு வகுத்துள்ள அரசாங்கம், அதனை மீறும் நிறுவனங்களுக்கு தண்டனை  வழங்கப்படும் என்பதை சட்டமாக்க வேண்டும்  என சிஐடியு, எப்எம்ஆர்ஏ, டிஎன்எம்எஸ்ஆர்ஏ சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. எனவே  அரசு தனது கொள்கையில், சட்டங்களில் மாற் றங்களைக் கொண்டு வந்தால் மருந்து விலை குறைவதற்கும், நாட்டு மக்கள் பயன்பாட்டிற் கும் ஏற்றதாக இருக்கும். ஆனால், சாதாரண மக்களின் வலிகளை உணர்ந்துள்ள மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் இதனை வலியு றுத்துகிறது. ஆனால் அரசாங்கம் மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்தவோ, உச்சவரம்பு நிர்ணயிக்கவோ தயாராக இல்லை.  எனவே, இந்தியா மக்கள் நலன் காக்கும் மருந்து கொள்கையை உருவாக்க வேண்டும்.  சுகாதாரத்திற்கு அரசு அதிக நிதி ஒதுக்க வேண் டும் என்கிற குரல் எங்களைப்போன்றவர்கள் எழுப்புகிறோம். எங்கள் குரலுக்கு வலுசேர்க்க  மக்களின் குரலும் வீரியத்தோடு எழ வேண்டும், என்றார். தொகுப்பு: எஸ்.சக்திவேல்