ஈரோடு, நவ.22- மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றுவோரை முழு நேர மருத்துவ ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும் என இவ்வூழியர்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் மனு அளித் தனர். தமிழ்நாடு அரசின் மருத்துவம், மருத்து வக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈரோடு மாவட் டத்தில் புதனன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இவரிடம் மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தொற்றா நோய்களினால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், களப் பணியாளர்களாக மகளிர் சுய உதவிக் குழு மூலம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர். ஒரு நாளில் 40 பேரை பரிசோ திக்க வேண்டும். பரிசோதனை கருவிகள் அனைத்தும் சொந்த செலவிலேயே வாங்க வேண்டும். அத்துடன் பணியிடங்களுக்குச் செல்லும் போக்குவரத்து செலவும் அவர்க ளைச் சார்ந்ததே. இப்பணிகளுக்காக ஊக்கத் தொகை என்ற பெயரில் வெறும் ரூ.5 ஆயி ரத்து 500 ஊதியமாக வழங்கப்படுகிறது. எனவே, வேலை நேரம் நிர்ணயிக்க வேண் டும். முழு நேர மருத்துவ ஊழியர்களாக அங்கீ கரிக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26ஆயிரம் வழங்க வேண்டும். ஆன்ட் ராய்டு செல்போன், இணைய செலவு, பதி வேடுகள் மற்றும் போக்குவரத்து செலவு வழங்க வேண்டும் என மக்களைத் தேடி மருத் துவ ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட கிளையினர் இம்மனுவினை அளித்தனர்.