districts

img

சிஐடியு சார்பில் மருத்துவ முகாம்

சேலம், டிச.17- சேலம் ரயில்வே ஏற்றுமதி, இறக்குமதி தொழிலாளர்கள் சங்கம் துவங்கி 50 ஆண்டை முன்னிட்டு, தொழிலாளர்க ளுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், சூரமங்கலம் மேக்னசைட் அலுவலகத் தில், ரயில்வே ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்க பொன் விழா ஆண்டை முன்னிட்டு, தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் முக்கியமாக இதய நோய் சம்பந் தமான பரிசோதனைகள் செய்யப்பட்டன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் ராஜராஜன் பங்கேற்று பரிசோதனைகளை மேற்கொண்டார். முன்னதாக ரயில்வே பார்வேடிங் ஏஜென்சீஸ் தலைவர் பழனிசாமி மருத்துவ  முகாமை துவங்கி வைத்தார். சிஐடியு சுமைப்பணி சம்மேளன தலைவர் ஆர்.வெங்கடபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச் சியில், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன், மாவட் டக்குழு உறுப்பினர் பி.பன்னீர்செல்வம், ஏற்றுமதி தொழிலா ளர் சங்கப் பொருளாளர் சக்திவேல், துணைச்செயலாளர்கள் மாரிமுத்து, சங்கர், துணைத்தலைவர்கள் மதியழகன், சுப்பிர மணி, கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.