கோவை, ஆக.2- பந்தையசாலை பகுதியில் அமைக்கப்பட்டு வந்த, பிரம் மாண்ட மீடியா டவர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக் கப்பட்டுள்ளது. கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் கோவையின் பல்வேறு பகுதிகளும் மேம்படுத்தப்பட்டு உள்ளன. அழகான குளக்கரைகள், சாலைகளில் எல்இடி விளக்குகள், லண்டன் க்ளாக் டவர், பந்தையசாலை நடைபாதை, புதிய மேம்பாலங் கள் என அடுத்தடுத்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வரு கிறது. இதனிடையே பந்தையசாலை பகுதியிலிருந்து ரெட் பீல்ட்ஸ் செல்லும் வழியில் தாமஸ் பார்க் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பிரம்மாண்டமான மீடியா டவர் அமைக் கும் பணிகள் தொடங்கி நடைபெற்றன. இந்த மீடியா டவ ரின் உச்சியில் தெற்கு ஆசியாவில் முதன்முறையாக பொது மக்களை கவரும் வகையில் சராசரியாக 8.15 மீ சுற்றளவு மற்றும் 1.70 மீட்டர் உயரமுள்ள காணொலி அமைப்பு அமைக் கப்பட்டுள்ளது. இந்த காணொலி அமைப்பில் நேரடி காணொலி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்கு மாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்த அமைப்பையும் ஆர்.எஸ்.புரம் கலை யரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இயக்குமாறு வசதி கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மீடியா டவரில் முழு பணி களும் நிறைவடைந்தது தற்போது பொதுமக்கள் பயன்பாட் டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான மீடியா டவர் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள் ளது.